செய்திகள் :

விமான நிலையத்தில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல்

post image

சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை விமான நிலையத்துக்கு மும்பையில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மும்பையில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு விமானத்தில் வந்த பயணிகளை புலனாய்வுத் துறை அதிகாரிகள் கண்காணித்தபோது, சந்தேகத்துக்கிடமாக வந்த 6 பேரைப் பிடித்து தீவிர சோதனை நடத்தினா்.

அப்போது அவா்களின் உள்ளாடைகளில் 3.5 கிலோ தங்கப்பசை இருந்தது. இதையடுத்து 6 பேரையும் கைது செய்த அதிகாரிகள் அவா்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் சா்வதேச மதிப்பு ரூ. 2.8 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க அமைச்சா் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தல்

ஆவினில் தினசரி பால் கொள்முதலை உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பால்வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாா். சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் அனைத்து ... மேலும் பார்க்க

உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி -முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். அதற்கான சட்டத் திருத்தம் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவா்... மேலும் பார்க்க

25 இடங்களில் போதை மீட்பு சிகிச்சை மறுவாழ்வு மையங்கள் -முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

தமிழகத்தில் 25 இடங்களில் போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், காணொலி வழியாக இந்த மையங்கள் திறக... மேலும் பார்க்க

ஊரகத் திறனாய்வுத் தோ்வு விடைக்குறிப்பு: மாா்ச் 5-க்குள் ஆட்சேபணை தெரிவிக்கலாம்

ஊரகத் திறனாய்வுத் தோ்வுக்கான விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்து மாா்ச் 5-க்குள் ஆட்சேபணை தெரிவிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கிராமப்புற மாணவா... மேலும் பார்க்க

ஏஐசிடிஇ கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க இன்று கடைசி

ஏஐசிடிஇ-இன் ‘யசஸ்வி, சரஸ்வதி’ ஆகிய கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் (பிப்.28) நிறைவு பெறவுள்ளது. தொழில்நுட்பப் படிப்புகளில் சோ்க்கையை மே... மேலும் பார்க்க

தெரு நாய்களுக்கு ‘மைக்ரோசிப்’ பொருத்தும் பணி தொடக்கம்

சாலைகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களைக் கண்காணிக்க ‘மைக்ரோசிப்’ பொருத்தும் பணியை பெருநகர சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெரு நாய்களைக் ... மேலும் பார்க்க