செய்திகள் :

விமானத்துக்கு `மனித வெடிகுண்டு' மிரட்டல்: மும்பைக்கு திருப்பிவிடப்பட இண்டிகோ விமானம்

post image

குவைத்திலிருந்து தெலுங்கானா நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் செய்தி வந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

குவைத்திலிருந்து இண்டிகோவின் ஏர்பஸ் A321-251NX என்ற விமானம் அதிகாலை 1:56 மணிக்குப் புறப்பட்டு ஹைதராபாத் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

அப்போது, விமானத்தில் 'மனித வெடிகுண்டு' இருப்பதாக டெல்லி விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் வழியே எச்சரிக்கை வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, விமானம் மும்பைக்குத் திருப்பி விடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவின் மும்பையில் காலை 8:10 மணிக்குத் தரையிறங்கியதாக ஃபிளைட் ராடார்24 தரவு காட்டுகிறது.

இண்டிகோ நிறுவனம்
இண்டிகோ நிறுவனம்

விமானத்தின் அவசரத் தரையிறக்கத்திற்காக மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் அவசர உதவியாளர்கள் உட்பட பாதுகாப்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இதற்கு முன்பு நவம்பர் 23 அன்று, ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்குப் பஹ்ரைனில் இருந்து வரும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

அதைத் தொடர்ந்து விமானம் மும்பைக்குத் திருப்பி விடப்பட்டு, பாதுகாப்பாகத் தரையிறங்கியது. இது தொடர்பாகப் பாதுகாப்புத்துறை அதிகாரி, "பாதுகாப்புச் சோதனை மேற்கொள்ளப்பட்டது, சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி" எனத் தெரிவித்தனர்.

``சகோதரர்கள் துரோகம், போலீஸார் தூண்டுதல்; காதலன் கொலைக்கு காரணம்'' - பாதிக்கப்பட்ட பெண் வேதனை

மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட்டில் காதல் திருமணம் செய்து கொள்ள இருந்த அச்சல் (20) என்ற பெண்ணின் காதலனை அவரது உறவினர்கள் படுகொலை செய்தனர். இதையடுத்து தனது காதலன் உடல் முன்பு நெற்றியில் குங்குமம் வைத்து க... மேலும் பார்க்க

வேலூர்: மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் பலி - கிராமத்தையே உலுக்கிய துயரம்

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகேயுள்ள ராமநாயிணி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் ( 55). விவசாயி. இவரின் மனைவி மல்லிகா. இவர்களுக்கு விகாஷ் (25), லோகேஷ் (23), ஜீவா (22) என்று மூன்று மகன்கள். ஜ... மேலும் பார்க்க

US: `டவுன் சென்டர் மாலில் துப்பாக்கிச் சூடா?' - காவல்துறை சொல்வது என்ன?

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் போகா ரேடன் பகுதியில் உள்ளது டவுன் சென்டர் மால். இந்த மாலில் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 29-ம் தேதி) துப்பாக்கிச் சூடு நடந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகின. இதனால் ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: ``திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் வீட்டில் கொள்ளை'' - போலீஸ் விசாரணை

திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் இவர் திமுக விவசாய பிரிவின் மாநில செயலாளராகவும், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாகவும் இருக்கிறார்.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள சித்தமல்லி இவருடைய ... மேலும் பார்க்க

ஆணவக் கொலை செய்யப்பட்ட காதலன்; சடலத்துடன் திருமணம் செய்த காதலி - கலங்கிய கிராமம்

மகாராஷ்டிராவின் நான்டெட் பகுதியைச் சேர்ந்த சக்ஷம் டேட் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஆஞ்சல் என்பவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர். இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஆ... மேலும் பார்க்க

கோவை: 3 மணி நேரத்தில் 12 வீடுகளில் கொள்ளை; அடுக்குமாடி குடியிருப்பில் வட மாநில கொள்ளையர்கள் கைவரிசை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு அரசு அலுவலர்கள், பத்திரிகையாளர்கள் வசித்து வருகிறார்கள். நேற்று அங்கு ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 12 வீடுகளில் நகை, பணம் கொள்ள... மேலும் பார்க்க