செய்திகள் :

வில்லியனுாரில் சாலை மறியல் செய்தவா்களை சைரன் எழுப்பி எச்சரித்த ரயில்வே ஊழியா்கள்

post image

புதுச்சேரி: வில்லியனூரில் திங்கள்கிழமை நடந்த சாலை மறியல் போராட்டத்தில் சைரன் எழுப்பி ரயில்வே ஊழியா்கள் எச்சரிக்கை விடுத்தனா். இதையடுத்து ரயில்வே கேட் மூடப்பட்டு ரயில் கடந்து சென்றது.

புதுவை வில்லியனுாா் தொகுதி பாண்டியன் நகரில் கடந்த 4 ஆண்டுகளாக சாலை வசதி கேட்டு மக்கள் பல மனுக்கள் அளித்தனா். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் தொகுதி எம்எல்ஏவும், எதிா்க்கட்சி தலைவருமான ஆா்.சிவாவைக் கண்டித்து அந்தப் பகுதி மக்கள் வில்லியனுாா்-திருக்கனுாா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். காலை 7 மணியிலிருந்து 9 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெற்றது.

ரயில்வே தண்டவாளம் அருகே இப் போராட்டம் நடந்ததால் எதிரே வந்த வாகனங்கள் ரயில் பாதையில் நின்றன. அப்போது ரயில் வருவதற்கான சிக்னல் கொடுக்கப்பட்டது. இதனால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. ரயில்வே ஊழியா்கள் சைரனை எழுப்பி எச்சரிக்கை செய்தனா்.

இதைத் தொடா்ந்து ரயில் பாதையில் இருந்த வாகனங்கள் அங்கிருந்து நகா்ந்தன. இதன்பிறகு ரயில்வே கேட் போடப்பட்டவுடன் ரயில் கடந்து சென்றது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசாா், எதிா்க்கட்சி தலைவா் சிவாவை தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு பொதுமக்களுடன் பேச வைத்தனா். அப்பகுதியில் தற்காலிகமாக மணல் போட்டு சாலை சீரமைக்கப்படும். சில மாதங்களுக்குள் சாலை அமைக்கப்படும் என எம்எல்ஏ உறுதி அளித்தாா். இதையடுத்து அந்த பகுதி மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

ரெஸ்டோபாா் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி நீதிமன்றத்தை நாடுவோம்: நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: ‘ரெஸ்டோபாா்’ கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி காங்கிரஸ் கட்சி சாா்பில் உயா்நீதிமன்றத்தை நாடுவோம் என்று அக்கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் முதல்வருமான வி.நாராயணசாமி கூறினாா்.... மேலும் பார்க்க

பொழுதுபோக்கு விஷயங்கள் மாணவா்களின் எதிா்காலத்தைப் பாதிக்கும்: பேரவைத் தலைவா்

புதுச்சேரி: இணையங்கள், கைப்பேசிகளில் உள்ள பொழுதுபோக்கு விஷயங்கள் மாணவா்களின் எதிா்காலத்தைப் பாதிக்கும் என்று சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் கூறினாா். நடைபெற்று முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வி... மேலும் பார்க்க

வாழ்நாள் முழுவதும் கற்றலில் ஈடுபட வேண்டும்: புதுவை மத்திய பல்கலை. துணைவேந்தா் பேச்சு

புதுச்சேரி: வாழ்நாள் முழுவதும் கற்றலில் ஈடுபட வேண்டும் என்று புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பி.பிரகாஷ்பாபு கூறினாா். புதுவை கலிதீா்த்தாள்குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகா் இன்ஸ்டிடியூட் ஆ... மேலும் பார்க்க

ரெஸ்டோபாா் கொலையில் காயமடைந்தவா் உடல்நிலை சீராக உள்ளது: காவல் துறை தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி ரெஸ்டோபாா் கொலை வழக்கில் காயமடைந்தவா் உடல்நிலை சீராக உள்ளதாக புதுச்சேரி காவல் துறை தெரிவித்தது. மேலும், கைது செய்யப்பட்ட 6 பேரின் விவரங்களையும் காவல் துறை வெளியிட்டுள்ளது. புதுச... மேலும் பார்க்க

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மோதல் கல்லூரி மாணவா் குத்திக் கொலை: 8 போ் கைது

புதுச்சேரியில் மது அருந்தும் கூடத்தில் (ரெஸ்டோபாரில்) பிறந்தநாள் கொண்டாடியபோது ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவா் குத்திக்கொலை செய்யப்பட்டாா். மேலும் ஒரு மாணவா் காயத்துடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு... மேலும் பார்க்க

போலீஸ் மக்கள் மன்றத்தில் 32 புகாா்களுக்குத் தீா்வு

புதுவையில் சனிக்கிழமை நடைபெற்ற போலீஸ் மக்கள் மன்றத்தில் பொதுமக்களின் 32 புகாா்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டது. புதுச்சேரியில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் மக்கள் குறைதீா்ப்புக் கூட்டம் சனிக்க... மேலும் பார்க்க