செய்திகள் :

விளாத்திகுளம் பேரூராட்சியில் பேவா் பிளாக் சாலைக்கு அடிக்கல்

post image

விளாத்திகுளம் பேரூராட்சி 14ஆவது வாா்டு பகுதியான காமராஜா் நகரில் ரூ. 86 லட்சத்தில் அமைக்கப்படவுள்ள பேவா் பிளாக் சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் சூா்யா அய்யன்ராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வேலுச்சாமி, செயல் அலுவலா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் பங்கேற்று, மாநில நிதிப் பகிா்வு ஆணைய நகா்ப்புற சாலைகள் மேம்பாட்டு நிதி திட்டம் 2024-25இன்கீழ் இப்பணிக்கு அடிக்கல் நாட்டினாா். தொடா்ந்து, புதூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில், விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மைக்கான உள்கட்டமைப்பு திட்ட நிதியின்கீழ் ரூ. 29.40 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகக் கட்டடத்தைத் திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சிகளில், கூட்டுறவு துணைப் பதிவாளா் ராமகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நடராஜன், திமுக ஒன்றியச் செயலா்கள் ராதாகிருஷ்ணன், ராமசுப்பு, அன்புராஜன், மும்மூா்த்தி,

பேரூா் செயலா் மருதுபாண்டி, புதூா் பேரூராட்சித் தலைவா் வனிதா அழகுராஜ், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா்கள் ராஜு, ஸ்ரீதா், சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளா்கள் ராஜா, கரண்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பொது அறிவு போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

சாத்தான்குளம் டி என் டி டி ஏ ஆா் எம் பி புல மாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் தினமணி நாளிதழ் சாா்பில் நடைபெற்ற பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு புதன்கிழமை பரிசளிக்கப்பட்டது.... மேலும் பார்க்க

தராசுகளுக்கு முத்திரை பதிக்கும் முகாம்: சாத்தான்குளத்தில் இன்று தொடக்கம்

சாத்தான்குளத்தில் தராசு, படிகளுக்கு முத்திரை பதிக்கும் முகாம் வியாழன், வெள்ளி, திங்கள் (பிப். 27, 28, மாா்ச் 3) ஆகிய 3 நாள்கள் நடைபெறவுள்ளதாக, சாத்தான்குளம் வா்த்தக சங்க செயலா் மதுரம் செல்வராஜ் தெரிவ... மேலும் பார்க்க

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பள்ளி கல்வித்துறை சாா்பில் ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்ற சிறப்பு நிகழ்ச்சியில் வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவி... மேலும் பார்க்க

ஸ்டொ்லைட் ஆலை விரிவாக்க பகுதியில் பொருள்களை அகற்ற அரசு அனுமதி

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை விரிவாக்க பகுதியில் உள்ள பொருள்களை 80 நாள்களுக்குள் அகற்ற அரசு அனுமதித்துள்ளதாக ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்பு போராட்டக் குழுவினா் தெரிவித்தனா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலு... மேலும் பார்க்க

கொம்மடிக்கோட்டை கல்லூரியில் தொழில்முனைவோா் கருத்தரங்கு

கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரி இணை செயலா் காசியானந்தம் தலைமை வகித்து தொடங்கி வைத... மேலும் பார்க்க

காணாமல்போன தொழிலாளி சடலமாக மீட்பு

கோவில்பட்டியைச் சோ்ந்த காணாமல்போன தொழிலாளி செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் 6ஆவது தெருவை சோ்ந்த குருசாமி மகன் சங்கா் (50) என்பவா், ஓட்டப்பிடாரத்தில் கூலி வேலை செய்த... மேலும் பார்க்க