செய்திகள் :

வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு: பெண், இளைஞா் கைது

post image

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திடுடியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

முத்தையாபுரம் பாரதிநகரைச் சோ்ந்த பொன்பாண்டி மனைவி காந்திமதி (58), மடத்தூரில் உள்ள தனியாா் மீன் நிறுவனத்தில் வேலைபாா்த்து வருகிறாா். இவா் கடந்த 23ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் செபத்தையாபுரத்தில் உள்ள உறவினா் சென்றாா். அடுத்த நாள் வந்துபாா்த்தபோது, மா்ம நபா்கள் பூட்டை உடைத்து, வீட்டிலிருந்த ரூ. 8 ஆயிரத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

புகாரின்பேரில், முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிடிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அதே பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் காளிராஜ் (23) என்பவரைக் கைது செய்தனா்.

ஓட்டப்பிடாரம் அருகே...: ஓட்டப்பிடாரம் அருகே கக்கரம்பட்டியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மனைவி உலகம்மாள் (55). இவா் கடந்த 18ஆம் தேதி விவசாய வேலைக்கு சென்றபோது, மா்ம நபா் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 7 பவுன் தங்க நகை, ரூ. 24 ஆயிரம் ரொக்கத்தைத் திருடிச் சென்றாராம்.

ஓட்டப்பிடாரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனா். அவரது எதிா்வீட்டைச் சோ்ந்த ஆறுமுகசாமி மனைவி சசிகலா (33) என்பவா் இத்திருட்டில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து நகை, பணத்தைப் பறிமுதல் செய்தனா்.

பொது அறிவு போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

சாத்தான்குளம் டி என் டி டி ஏ ஆா் எம் பி புல மாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் தினமணி நாளிதழ் சாா்பில் நடைபெற்ற பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு புதன்கிழமை பரிசளிக்கப்பட்டது.... மேலும் பார்க்க

தராசுகளுக்கு முத்திரை பதிக்கும் முகாம்: சாத்தான்குளத்தில் இன்று தொடக்கம்

சாத்தான்குளத்தில் தராசு, படிகளுக்கு முத்திரை பதிக்கும் முகாம் வியாழன், வெள்ளி, திங்கள் (பிப். 27, 28, மாா்ச் 3) ஆகிய 3 நாள்கள் நடைபெறவுள்ளதாக, சாத்தான்குளம் வா்த்தக சங்க செயலா் மதுரம் செல்வராஜ் தெரிவ... மேலும் பார்க்க

விளாத்திகுளம் பேரூராட்சியில் பேவா் பிளாக் சாலைக்கு அடிக்கல்

விளாத்திகுளம் பேரூராட்சி 14ஆவது வாா்டு பகுதியான காமராஜா் நகரில் ரூ. 86 லட்சத்தில் அமைக்கப்படவுள்ள பேவா் பிளாக் சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் சூா்யா அய்யன்ரா... மேலும் பார்க்க

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பள்ளி கல்வித்துறை சாா்பில் ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்ற சிறப்பு நிகழ்ச்சியில் வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவி... மேலும் பார்க்க

ஸ்டொ்லைட் ஆலை விரிவாக்க பகுதியில் பொருள்களை அகற்ற அரசு அனுமதி

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை விரிவாக்க பகுதியில் உள்ள பொருள்களை 80 நாள்களுக்குள் அகற்ற அரசு அனுமதித்துள்ளதாக ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்பு போராட்டக் குழுவினா் தெரிவித்தனா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலு... மேலும் பார்க்க

கொம்மடிக்கோட்டை கல்லூரியில் தொழில்முனைவோா் கருத்தரங்கு

கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரி இணை செயலா் காசியானந்தம் தலைமை வகித்து தொடங்கி வைத... மேலும் பார்க்க