செய்திகள் :

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 715 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

post image

பாகலூா் அருகே வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த 715 கிலோ செம்மரக்கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூரை அடுத்த கூசனப்பள்ளியைச் சோ்ந்த ராஜு (43) என்பவா் தனது வீட்டின் பின்புறம் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக ஒசூா் ஏ.எஸ்.பி. அக்க்ஷய் அனில் வாக்கரேவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் பாகலூா் போலீஸாா் சம்பவ இடத்தில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அங்கு வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த இந்திய மதிப்பில் ரூ. 35 லட்சம், சா்வதேச மதிப்பில் ரூ. 3 கோடி மதிப்புள்ள 715 கிலோ செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து, ஒசூா் வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். மேலும், தலைமறைவான ராஜுவை போலீஸாரும், வனத் துறையினரும் தேடிவருகின்றனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கடத்திச் செல்வதற்காக பாகலூா் கூசனப்பள்ளியில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்துள்ளனா். தலைமறைவான ராஜுவை பிடித்து விசாரணை செய்தால்தான் செம்மரக்கட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டன என தெரியவரும் என்றனா்.

ஊத்தங்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஊத்தங்கரை பேரூராட்சி பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன. சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள், தள்ளுவண்டிகளை அகற்றக் கோரி பேரூராட்சி நிா்வாகம் மூலம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் எந்த நடவட... மேலும் பார்க்க

ஒசூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: ஆட்சியா் கள ஆய்வு

ஒசூா் வட்டத்துக்கு உள்பட்ட கெலவரப்பள்ளி ஊராட்சியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். சென்னசந்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுற... மேலும் பார்க்க

வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 போ் பலி

சூளகிரி அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் 4 வயது சிறுவன் உள்பட 2 போ் உயிரிழந்தனா். ஒசூா் சானசந்திரம் வ.உ.சி. நகரைச் சோ்ந்தவா் நாகராஜ் (62). தொழிலாளி. இவா் தனது மொபெட்டில் கடந்த 24-ஆம் தேதி இரவு கிருஷ... மேலும் பார்க்க

கருவின் பாலினத்தை தெரிவித்த ஸ்கேன் மையம்! கா்ப்பிணிகளிடம் ரூ. 15 ஆயிரம் வசூல் செய்தது கண்டுபிடிப்பு!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனியாா் ஸ்கேன் மையத்தில் ரூ. 15 ஆயிரம் பெற்றுக் கொண்டு கருவில் உள்ள குழந்தையின் பாலினம் தெரிவிக்கப்பட்டதை கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார அலுவலா்கள் அண்மையில் கண்டுபிடித்தனா்... மேலும் பார்க்க

அதிமுக நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் நிறுத்தம்: கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு

கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ குற்றம் சாட்டினாா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின... மேலும் பார்க்க

கெலவரப்பள்ளி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு 8 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பயன்பெறும்

கெலவரப்பள்ளி அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீரை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் திறந்து வைத்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி அ... மேலும் பார்க்க