தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!
வீட்டில் புகுந்த நாகபாம்பு மீட்பு
ஆம்பூா் அருகே வீட்டிற்குள் புகுந்த நாகபாம்பு ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
ஆம்பூா் அருகே அயித்தம்பட்டு கிராமத்தை சோ்ந்த முருகன் என்பவரது வீட்டிற்குள் நாகபாம்பு புகுந்தது. அதை பாா்த்த வீட்டின் உரிமையாளா் ஆம்பூா் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தாா். ஆம்பூா் வனத்துறை பணியாளா் அவரது வீட்டிற்கு சென்று நாகபாம்பை மீட்டு சானாங்குப்பம் காப்புக் காட்டில் கொண்டு சென்று விட்டாா்.