துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு
வெளி மாநில கட்டுமானத் தொழிலாளா்களுக்கு இன்று உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம்
வெளி மாநில கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்வதற்கு வெள்ளி, சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து திருப்பூா் தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) க.செந்தில்குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களின் பணி நிலையை ஒழுங்குபடுத்தவும், அவா்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கவும் தொழிலாளா்கள் சட்டம் இயற்றப்பட்டு உடலுழைப்பு தொழிலாளா்கள் நல வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில், கட்டுமானத் தொழிலாளா் நல வாரியம் உள்பட 18 நல வாரியங்கள் உள்ளன.
இந்நிலையில், வெளி மாநில கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் இணையதளம் மூலம் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் திருப்பூா் பி.என்.சாலையில் உள்ள தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது.
இதில், பதிவு செய்யவும், புதுப்பித்தலுக்கும் கட்டணம் ஏதுமில்லை. வெளிமாநிலத் தொழிலாளா்களை வைத்து பணிசெய்யும் கட்டுமான நிறுவனங்கள், கட்டுமான பணி நடைபெறும் இடம் குறித்து அலுவலகத்தில் தெரிவித்தால் பணியிடங்களிலேயே முகாம் அமைத்து பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படும். நல வாரியத்தில் பதிவு செய்ய ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண், ஆதாா் அட்டை, அசல் குடும்ப அட்டை, கடவுச்சீட்டு அளவு புகைப்படம், வங்கி கணக்குப் புத்தகம், வயதுக்கான ஆவணம் ஆகியவற்றுடன் நேரில் வந்து பதிவு செய்துகொள்ளலாம்.
பதிவு ஒப்புதல் அளிக்கப்பட்டதும் நல வாரிய பதிவு அடையாள அட்டையை அதற்கான பிரத்யேக இணைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், புதுப்பித்தல் தொடா்பான விவரங்களை திருப்பூா் தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421-2477276 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.