செய்திகள் :

'வெளிச்சம் டிவியை கட்டியெழுப்பியது யார்?' - சீண்டிக்கொள்ளும் சிறுத்தைகள்!

post image

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஊடகப்பிரிவு முதன்மைச் செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு சமீபத்தில் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்திருந்தார். விசிகவின் அதிகாரப்பூர்வ சேனலான 'வெளிச்சம் டிவி' யை பனையூர் பாபுதான் நிர்வகித்து வந்தார். அவர் கட்சியிலிருந்து விலகியதால் வெளிச்சம் டிவி யாருடைய கட்டுப்பாட்டில் யாருக்காக இயங்கும் என்கிற கேள்வி எழுந்தது.

பனையூர் பாபு
பனையூர் பாபு

வெளிச்சம் டிவி உரிமம் தொடர்பாக பனையூர் பாபு தரப்பும் விசிக தரப்பும் மாறி மாறி கருத்துகளை பேசி வருவதால் சிறுத்தைகள் கொந்தளித்துப் போய் இருக்கின்றனர்.

இதுதொடர்பாக நேற்று பேசிய விசிகவின் பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி, 'பனையூர் பாபுவின் முயற்சியால் வெளிச்சம் டிவி தொடங்கப்பட்ட் பிறகுதான் விசிகவின் செய்திகள் கவனம் பெற்றதாக அவரே கூறிக்கொள்கிறார்.

ஆனால், 2010-11 காலக்கட்டத்திலேயே விசிகவுக்கென ஒரு ஊடகம் தேவை எனவும் அதை தொடங்குவதற்கான முயற்சிகளிலும் திருமா இறங்கினார். நிறைய பேரின் பங்களிப்பை திருமா நாடினார். திருமா மற்றும் கோவிந்தராஜ் என்பவரால் மருதம் என்கிற நிறுவனம் 2011 இல் தொடங்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் பெயரில்தான் 2016 இல் வெளிச்சம் டிவி தொடங்கப்பட்டது. பனையூர் பாபு கேபிளிலில் வேலை பார்த்த அனுபவம் இருந்ததால் அவர் இந்த தொலைக்காட்சி சம்பந்தமான விவகாரங்களை பார்த்துக் கொண்டார். கட்டிடம் கட்ட கூட இருந்து உதவியதற்காக கட்டிடமே என்னுடையது என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?' எனப் பேசியிருந்தார்.

எஸ் எஸ் பாலாஜி
எஸ் எஸ் பாலாஜி

எஸ்.எஸ்.பாலாஜியின் குற்றச்சாட்டுகளை மறுத்து பேசியிருந்த பனையூர் பாபு, 'வெளிச்சம் தொலைக்காட்சியை 2016 இல் வாடகை லைசன்ஸ் வாங்கியே தொடங்கினோம். சேனலில் நாங்கள் பாஜகவை கடுமையாக விமர்சித்த போது லைசன்ஸின் உரிமையாளர் லைசன்ஸ் கொடுக்க முடியாது என்றார். அப்போது என்னுடைய பணத்தை முதலீடு செய்து சொந்தமாக லைசன்ஸ் வாங்கினேன். காலையிலிருந்து இரவு வரைக்கும் சேனல் ஆபிஸில் மட்டுமேதான் இருப்பேன். மருதம் நிறுவனத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என பாலாஜி கூறுகிறார். அந்த நிறுவனத்தில் 40% பங்கு என்னுடையது. இது எனக்கும் திருமாவுக்கும் மட்டுமே தெரிந்த உண்மை. எஸ்.எஸ்.பாலாஜி திருமாவுக்கு தெரிந்து பேசுகிறாரா இல்லையா என்றே தெரியவில்லை.

திருமாவளவன் - பனையூர் பாபு

தேர்தல் தேதி அறிவிப்பிலிருந்து இப்போது வரை திருமாவுடன் பேசவில்லை. ஆனாலும் இந்த சேனலும் இந்த லைசன்ஸூம் திருமாவுக்காகவே தொடரும் என்பதில் மாற்றமே இல்லை' என்றார்.

'வெளிச்சம் டிவி தொடர்பான கருத்து மோதல்களால் சிறுத்தைகள் கொதித்துப் போயிருக்கின்றனர்.

நெல்லை: 'விஜய் படத்தின் கீழ் அமர மாட்டேன்!' - இருக்கையை இடமாற்றிய மேயர்

அரசு அலுவலகங்களில் தமிழக முதலமைச்சர் புகைப்படம் வைக்க வேண்டும் என்ற் அரசாணை உள்ளது. ஆனாலும், திமுகவின் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பு வகிக்கும் மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்... மேலும் பார்க்க

இஸ்ரேலின் முக்கிய நகரில் பிரமாண்ட சிவாஜி சிலை நிறுவப்படுகிறது! - பின்னணி என்ன?

இந்திய தலைநகர் புது டெல்லிக்கும் இஸ்ரேலின் டெல் அவிவ்விற்கும் இடையே வளர்ந்து வரும் கலாச்சார மற்றும் மூலோபாய உறவுகளின் ஒரு புதிய மைல்கல்லாக, இஸ்ரேலில் மராட்டியப் பேரரசர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் திருவு... மேலும் பார்க்க

சேலம்: `ஓட்டுக்கு ரூ.2000 கொடுத்தார் தவெக MLA லட்சுமணன்' - தவெக அதியமான் கொளுத்திப் போட்ட பின்னணி?

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதியின் த.வெ.க வேட்பாளராக போட்டியிட்டவர் அதியமான். அ.தி.மு.க வேட்பாளர் மணியிடம் 14,539 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருந்தார். நம்பி வாக்களித்த மக்களுக்... மேலும் பார்க்க

முதல்வர் விஜய்யின் முதல் கையெழுத்து - 'சிங்கப் பெண் அதிரடிப் படை' திட்டம் இன்று தொடக்கம் | Live Updates

இன்று சிங்கப் பெண் அதிரடிப்படை திட்டம் தொடக்கம்தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றதும் போட்ட முதல் கையெழுத்துகளில் ஒன்று - சிங்கப் பெண் அதிரடிப்படை திட்டம்.இந்தத் திட்டத்தை இன்று மாலை 5 மணிக்கு சென... மேலும் பார்க்க

H-1B விசா: "1 லட்சம் கட்டணம் விதிக்க ட்ரம்பிற்கு அதிகாரம் கிடையாது" - US நீதிமன்ற தீர்ப்பு

சட்டத்திற்குப் புறம்பாக அமெரிக்காவில் குடியேறியவர்களைத் தடாலடியாக வெளியேற்றும் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அறிவிப்புகளில் ஹெச்-1பி விசா விலை ஏற்றமும் ஒன்று. அமெரிக்காவின் இந்த விசாவை அதிகம்... மேலும் பார்க்க