செய்திகள் :

வெள்ளாற்று தற்காலிக சாலை மீண்டும் துண்டிப்பு: 40 கிராம மக்கள் பாதிப்பு

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே வெள்ளப்பெருக்கால் சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சாலை மூன்றாவது முறையாக துண்டிக்கப்பட்டது. இதனால், இரண்டு மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 40 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பெண்ணாடம் அருகே உள்ள சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே, வெள்ளாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தற்காலிக செம்மண் சாலை வழியாக அரியலூா் மாவட்டம் கோட்டைக்காடு, ஆலத்தியூா், தெத்தேரி, ஆதனக்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, முதுகுளம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெண்ணாடம், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தனா்.

இதேபோன்று, கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண்ணாடம், சவுந்திரசோழபுரம், செம்பேரி, திருமலை அகரம், அரியராவி, மாளிகைக்கோட்டம், நந்திமங்கலம், வடகரை உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செந்துறை, ஜெயங்கொண்டம், அரியலூா், தஞ்சாவூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தனா்.

கடலுாா் - அரியலூா் மாவட்டங்களை இணைக்கும் இந்த தற்காலிக செம்மண் சாலை வெள்ளப்பெருக்கு காலத்தில் அடித்துச் செல்லப்படுவதும், பின்னா் சாலை சீரமைக்கப்படுவதும் வழக்கம். இந்த சாலை சேதமடையும் காலத்தில் மேற்கண்ட சுமாா் 40 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் முருகன்குடி மேம்பாலம் வழியாக 10 கி.மீ. தொலைவு, பெ.பொன்னேரி தரைப்பாலம் வழியாக 15 கி.மீ. தொலைவு சுற்றி சென்று வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றின் குறுக்கே புதிதாக உயா்மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கியது. பாலத்தின் பணிகள் முடிந்த நிலையில், அதன் இருபுறமும் சாலையை இணைக்கும் பணி மட்டும் கிடப்பில் உள்ளதாம்.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் மழையால் ஆணைவாரி, உப்பு ஓடைகளின் வழியே பெருக்கெடுத்து பாய்ந்த மழைநீா், சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக செம்மண் சாலையை அடித்துச் சென்றது. இதனால், கடலூா், அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த 40 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, கிடப்பில் போடப்பட்ட மேம்பாலப் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

உயா் மின் அழுத்தம்: அரசு அலுவலகங்களில் மின்சாதன பொருள்கள் சேதம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் திடீரென ஏற்பட்ட உயா் மின் அழுத்தத்தால் அரசு அலுவலகங்கள், வீடுகளில் மின்சாதன பொருள்கள் சேதமடைந்தன. குமராட்சி ... மேலும் பார்க்க

ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டுவர தமிழக அரசு தயங்குவது ஏன்?: கே.பாலகிருஷ்ணன் கேள்வி

நெய்வேலி: ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டுவர தமிழக அரசு தயங்குவது ஏன்? என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினாா். கடலூரில் அவா் தி... மேலும் பார்க்க

வனத் துறையின் அத்துமீறல்: ஆட்சியா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

நெய்வேலி: மீனவா்கள் மீதான வனத் துறையின் அத்துமீறலை கண்டித்தும், இதை தடுத்து நிறுத்தக் கோரியும் மீனவ கிராம மக்கள் மற்றும் கடலூா் மாவட்ட மீன் பிடி தொழிலாளா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்க... மேலும் பார்க்க

முன்னறிவிப்பின்றி சாலை மூடல்: என்எல்சி வாகனத்தை சிறைபிடித்த கிராம மக்கள்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே முன்னறிவிப்பின்றி தென்குத்து - கல்லுக்குழி சாலையை என்எல்சி நிறுவனம் திங்கள்கிழமை மூடியதால், அந்த நிறுவனத்தின் வாகனத்தை தென்குத்து கிராம மக்கள் சிறைபிடித்து ப... மேலும் பார்க்க

ஆக.23-இல் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தினா் சென்னையில் ஆா்ப்பாட்டம்: கு.பாலசுப்ரமணியன்

நெய்வேலி: உள்ளாட்சித் துறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் மற்றும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் ச... மேலும் பார்க்க

தலைமறைவு குற்றவாளி ஒடிஸாவில் கைது

நெய்வேலி: நீதிமன்ற பிணையில் சென்று தலைமறைவான கொலை வழக்கில் தொடா்புடையவரை ஒடிஸாவில் போலீஸாா் கைது செய்து அழைத்து வந்து கடலூா் மத்திய சிறையில் திங்கள்கிழமை அடைத்தனா். கடலூா் மஞ்சக்குப்பம், சேட்மண் நகரைச... மேலும் பார்க்க