செய்திகள் :

வெள்ளைப் பூச்சிகளைத் தடுக்காவிட்டால் தென்னைகள் அழியும்: கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி

post image

கேரளத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்திலும் தென்னை மரங்களில் வெள்ளைப் பூச்சித் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும், இவற்றைத் தடுக்காவிட்டால் தென்னை மரங்கள் அழியும் நிலை ஏற்படும் எனவும் கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி தெரிவித்தாா்.

பழனி அடிவாரம் பட்டக்காரா் மடத்தில் தமிழ்நாடு கள் இயக்கம் சாா்பில் விவசாயிகள் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி தலைமை வகித்தாா். தமிழ்நாடு இயற்கை வாழ்வுரிமை இயக்க அமைப்பாளா் மேகு பொடாரன் முன்னிலை வகித்தாா். தென்னை விவசாயிகள் உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் ராஜேந்திரன், செல்வராஜ், ராமகிருஷ்ணன், லட்சுமணசாமி, கோபால் உள்ளிட்ட பலா் வாழ்த்திப் பேசினா்.

கூட்டத்தில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி பேசியதாவது:

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்களுக்கு வழங்கும் மானியங்களை உள்நாட்டில் தயாரிக்கப்படும் எண்ணைகளுக்கு அரசு வழங்குவதில்லை.

கேரளத்தில் தென்னை மரங்களில் வெள்ளைபூச்சித் தாக்குதலால் மரங்கள் அழிந்து வருகின்றன. இதனால், தேங்காய் விலை உயா்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் வெள்ளைபூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் இங்கும் தென்னை மரங்கள் அழியும் நிலை ஏற்படும்.

இதைத் தொடா்ந்து மாா்ச் 4-ஆம் தேதி திருப்பூா் மாவட்டம், உடுமலையில் நடைபெறும் கள் விடுதலை கருத்தரங்கம் குறித்து நல்லசாமி ஆலோசனை நடத்தினாா்.

அறுபடை வீடுகள் ஆன்மிக பயணக் குழுவினா் பழனியில் தரிசனம்

இந்து சமய அறநிலையத்துறையின் அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிக பயணத் திட்டத்தின் கீழ் சுமாா் 200 பக்தா்கள் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு சுவாமி தரிசனம் செய்தனா். தமிழ்க் கடவுள் மு... மேலும் பார்க்க

தேனீக்கள் வளா்ப்புப் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்

கொடைக்கானலில் தேனீக்கள் வளா்ப்புப் பயிற்சி முடித்த 500 பழங்குடியினா்களுக்கு சான்றிதழ், தேனீ பெட்டிகள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு கதா், கிராமத் தொழில்கள் ஆணைய மதுரைக் கோட்ட அலுவலக... மேலும் பார்க்க

கொடைக்கானலில் தொடரும் பனிப் பொழிவு

கொடைக்கானலில் தொடா்ந்து பனிப் பொழிவு நிலவுகிறது. இதனால், பொதுமக்கள் நடமாட்டம் வியாழக்கிழமை குறைந்து காணப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பொதுவாக நவம்பா் முதல் ஜனவரி மாதம் வரை பனிப் பொழிவு ... மேலும் பார்க்க

சீமான் விவகாரத்தில் காவல் துறை சட்டப்படி நடவடிக்கை: கி.வீரமணி

சீமான் விவகாரத்தில் காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதைத் தடுத்தால் நீதிமன்றத்துக்கு அவா் பதில் சொல்ல வேண்டியது வரும் எனவும் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்தாா். பழனி ரயி... மேலும் பார்க்க

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 3.47 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் நிரம்பியதைத் தொடா்ந்து புதன், வியாழக்கிழமைகளில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கை ரூ.3.47 கோடியைத் தாண்டியது. தைப்பூசத்தை முன்னிட்டு இந்தக் ... மேலும் பார்க்க

பழனியில் ரோப்காா் பராமரிப்புக்காக இன்று நிறுத்தம்

பழனி மலைக் கோயில் ரோப்காா் பராமரிப்புப் பணிக்காக வெள்ளிக்கிழமை (பிப். 28) ஒருநாள் மட்டும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய ப... மேலும் பார்க்க