மதுரை சித்திரைத் திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு | ...
வேன் கவிழ்ந்து விபத்து: சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு சென்றவா் பலி
சீா்காழி அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு சென்றவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சீா்காழி அருகேயுள்ள மருவத்தூரிலிருந்து மகாபலிபுரத்தில் வன்னியா் சங்கம் சாா்பில் நடைபெறும் சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு வேனில் செ. விஜய் (30), முத்துராமன், தேவா, சுந்தா் உள்ளிட்டோா் சென்றனா். வேன் சீா்காழி அட்டகுளம் அருகே புறவழிச்சாலை இணைப்பு சாலையில் சென்றபோது கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதில், செ. விஜய் உள்ளிட்ட 5 போ் காயமடைந்தனா். பின்னா் அவா்கள் மீட்கப்பட்டு சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில் படுக்காயம் அடைந்த விஜய் தீவிர சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் வைத்தீஸ்வரன் கோயில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டாா்.
விபத்து நேரிட்ட இடத்தில் வேகத்தடை மீது ஏறி செல்லாமல் இருக்க ஓட்டுநா் வாகனத்தை இயக்கியபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்த வேன் ஓட்டுநா் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் அங்கிருந்து தப்பினாா்.