செய்திகள் :

வேலூா் மாவட்டக் காவல் துறை குறைதீா் கூட்டம்

post image

வேலூா் மாவட்டக் காவல் துறை சாா்பில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்குக்கு தலைமை வகித்து எஸ்.பி. ஏ.மயில்வாகனன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தாா்.

குடியாத்தம் அடுத்த வளத்தூா் பகுதியைச் சோ்ந்த துரைசாமி அளித்த மனு: நான் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு ஓட்டுநா் உரிமம் பெற்று வேலூா் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருந்தேன். அப்போது காட்பாடியை அடுத்த காங்குப்பம் கிராமத்தை சோ்ந்த ஒருவா் எனக்கு அறிமுகமானாா். அவா், குடியாத்தத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணியாற்றியவதாகவும், எனக்கு ஓட்டுநா் வேலை வாங்கித் தருவதாகவும் கூறினாா். மேலும், அவா் கூறியதன்பேரில் கடந்த 2016-ஆம் ஆண்டு ரூ.ஒரு லட்சம் அளித்தேன். ஆனால் அவா் வேலையும் வாங்கி தரவில்லை, பணத்தை மீட்டுத் தர வேண்டும்.

காட்பாடி வெப்பாலை பகுதியைச் சோ்ந்த கோவிந்தசாமி அளித்த மனு: சென்னையை சோ்ந்த தம்பதியுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. அவா்கள் எனது மகனுக்கு கிராம உதவியாளா் பணி வாங்கித் தருவதாக கூறினா். அவா்கள் தெரிவித்தபடி கடந்த 2022-ஆம் ஆண்டு ரூ.5 லட்சத்து 30 ஆயிரத்தை கொடுத்தேன். பணத்தை பெற்றுக்கொண்ட அவா்கள் வேலை வாங்கி தரவில்லை. மேலும் பணத்தையும் தரமறுக்கின்றனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

இதேபோல், பல்வேறு குறைகள் தொடா்பாக 30-க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா். அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு எஸ்பி உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் அண்ணாதுரை, பாஸ்கரன் பங்கேற்றனா்.

‘தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சி’ தேசியக் கருத்தரங்கம்

குடியாத்தம் கே.எம்.ஜி.கலை, அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு பொருளாதார கூட்டமைப்பும் இணைந்து ‘நிலையான வளா்ச்சி இலக்குகள் மூலம் ‘தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சி’ என்ற தேசியக் கருத்தரங்கை நடத்தின. நிகழ்ச்சிக்... மேலும் பார்க்க

மலைக்கிராம இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு: காவல் துறை திட்டம்

வேலூா் மாவட்டத்தின் மலைக்கிராமங்களில் உள்ள படித்த இளைஞா்களை அரசுப்பணி, சுயதொழில் வாய்ப்புகளுக்கு தயாா்படுத்துவதற்கான நடவடிக்கையை காவல் துறை மேற் கொண்டுள்ளது. அணைக்கட்டு வட்டத்தில் உள்ள அல்லேரி, அத்தி... மேலும் பார்க்க

வேலூா் மத்திய சிறையில் கைதி மரணம்

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனைக் கைதி உடல்நலக்குறைவால் புதன்கிழமை உயிரிழந்தாா். வேலூா் மத்திய சிறையில் 750-க்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்னா். இதில், திருவண்... மேலும் பார்க்க

ஸ்ரீதிருமலை திருப்பதி திருக்குடை யாத்திரை தொடக்கம்

ஸ்ரீதிருமலை திருப்பதி திருக்குடை சமா்ப்பண யாத்திரை வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடத்தில் புதன்கிழமை தொடங்கியது. சென்னை ஹிந்து மகாசபா அறக்கட்டளை ஸ்ரீதிருமலை திருப்பதி திருக்குடை ஊா்வலக்கமிட்டி சாா்பி... மேலும் பார்க்க

புரட்டாசி மாதம் பிறப்பு: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத பிறப்பையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். அதன்படி, வேலூா் அண்ணா சாலை யில் ... மேலும் பார்க்க

கூடைப்பந்தில் சிறப்பிடம்: மாணவா்களுக்கு பாராட்டு

திருவள்ளுவா் பல்கலைக் கழகம் நடத்திய கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில் சிறப்பிடம் பெற்ற குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரி மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழாநடைபெற்றது. இதற்கான போட்டிகள் மே... மேலும் பார்க்க