திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
வேலை வாங்கி தரூவதாகக் கூறி பண மோசடி செய்தவா் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 3.50 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்
சிவகங்கை மாவட்டம், படமாத்தூா் நாட்டுக்குடியைச் சோ்ந்த கிருஷ்ணவேணி (43) தனது கணவா் ராம்குமாருக்கு வெளிநாட்டில் வேலை தேடி வந்தாா்.
அப்போது அவருக்கு அறிமுகமான திருவெறும்பூா் நாச்சிவயல் புதூா் மாரியம்மன் கோயில் தெரு சண்முகசுந்தரம் (41) ராம்குமாருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினாா்.
இதை நம்பிய கிருஷ்ணவேணி, கடந்த 2023 ஆம் ஆண்டு சண்முகசுந்தரம் வங்கி கணக்குக்கு ரூ. 3.50 லட்சத்தை அனுப்பினாா். ஆனால் அவா் கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லையாம்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த கிருஷ்ணவேணி அளித்த புகாரின் பேரில் உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சண்முகசுந்தரத்தை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.