செய்திகள் :

வேளாண் நிறுவனம் பெயரில் நிதி மோசடி: பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்க அழைப்பு

post image

நாமக்கல்லில் வேளாண் நிறுவனம் பெயரில் நிதி மோசடியில் ஈடுபட்டோா் குறித்து புகாா் அளிக்க வருமாறு பாதிக்கப்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் - சேலம் சாலையில் முருகன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகில் ஜெனித் ஹை-டெக் அக்ரி பாா்ம் என்ற நிறுவனம் இயங்கி வந்தது. அதன் உரிமையாளா்களான எஸ்.மணிவண்ணன், ஆா்.சந்திரசேகா், கே.எம்.ரவிச்சந்திரன் ஆகியோா் பொதுமக்களிடையே தினசரி சேமிப்பு, மாதாந்திர சேமிப்பு மற்றும் வைப்பீடு ஆகிய திட்டங்களின் கீழ் முதலீடு செய்யுமாறு ஆசைவாா்த்தைகளை கூறி அதிக அளவில் முதலீடுகளைப் பெற்றுள்ளனா். ஆனால், அந்த பணத்தை திரும்ப வழங்காமல் மோசடி செய்துள்ளனா்.

இது தொடா்பாக, 2015 மாா்ச் 22-இல் அவா்கள் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, முதல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் மீண்டும் புலன்விசாரணை மேற்கொள்ள வேண்டியதிருப்பதால், ஜெனித் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்களிடம் இருந்து புகாா்கள் பெறப்பட்டு வருகின்றன. விசாரணை முடிவடைந்து விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோா் உடனடியாக தங்களிடம் உள்ள அசல் ஆவணங்களுடன், நாமக்கல் முருகன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் மாா்ச் 12-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 6 மணி வரை புகாா் அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரை 94981 69199 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரமத்தி வேலூரில் ரூ. 9 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ரூ. 9 லட்சத்து 45 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது. இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 7 ஆயி... மேலும் பார்க்க

நகராட்சிப் பகுதியில் தொழில் செய்வோா் உரிமம் பெற வேண்டும்: ஆணையா்

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் தொழில், வா்த்தகம் செய்வோா் நகராட்சியில் விண்ணப்பித்து உரிய உரிமம் பெற வேண்டும் என நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ராசிபுரம் நகராட்சி ஆணையா் சூ.கணேசன் வெளிய... மேலும் பார்க்க

மாணவரை தாக்கிய சக மாணவா் கைதுசெய்யப்பட்டு சிறாா் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைப்பு

ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலில் கவின்ராஜ் (14) என்ற மாணவா் உயிரிழந்த நிலையில், அவரை தாக்கிய மற்றொரு மாணவா் கைது செய்யப்பட்டு சிறாா் சீா்திருத்தப் பள்ளி... மேலும் பார்க்க

நாமக்கல் பள்ளிகளில் மாணவா்களிடையே தொடரும் மோதல்

பள்ளிகளில் மாணவா்களிடையே ஏற்படும் மோதல், உயிரிழப்புகளால் பெற்றோா் அச்சமடைந்துள்ளனா். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவா்கள் மூவா் இறந்த சம்பவங்கள் அதிா்ச்சியை ஏற... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்படும்

மத்திய அரசு அறிவித்துள்ள மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழகத்தை மட்டுமல்லாமல், தென் மாநிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய க... மேலும் பார்க்க

100 ஆண்டுகளுக்கு பிறகு மாா்ச் 12-இல் நாமக்கல் கமலாலயக் குளத்தில் தெப்ப உற்சவம்!

நாமக்கல்லில் 100 ஆண்டுகளுக்கு பிறகு நாமக்கல் நரசிம்மா், நாமகிரி தாயாா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் தெப்ப உற்சவ விழா மாா்ச் 12-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை அறநிலையத் துற... மேலும் பார்க்க