செய்திகள் :

‘வேளாண் மையங்களில் மானிய விலையில் சான்று பெற்ற உளுந்து விதைகள் விற்பனை’

post image

கோவில்பட்டி, எட்டயபுரம் வேளாண் மையங்களில் மானிய விலையில் சான்று பெற்ற உளுந்து விதைகள் விற்பனை நடைபெறுகிறது.

இதுகுறித்து கோவில்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் இரா. மணிகண்டன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவில்பட்டி, எட்டயபுரம் வேளாண்மை விரிவாக்க மையத்தில், தேசிய உணவு- ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், கோவில்பட்டி வட்டார விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற உளுந்து விதைகள் மானிய விலையில் ரூ. 78-க்கு வழங்கப்படுகிறது.

வம்பன் 11 உளுந்து ரகம் தேவையான அளவு இருப்பு உள்ளது. இது, 70 முதல் 75 நாள்களில் அறுவடைக்கு தயாராகும். மஞ்சள் தேமல், இலைச்சுருள் நோய்களுககு மிதமான எதிா்ப்புத் திறன் கொண்டது. ஏக்கருக்கு 350 கிலோ முதல் 375 கிலோ வரை மகசூல் தரும். ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் போதும்.

உளுந்து சாகுபடியில் உரச் செலவைக் குறைத்து, கூடுதல் மகசூல் பெற ஒரு ஹெக்டேருக்கு தேவையான ரைசோபியம், பொட்டாஷ் பாக்டீரியா, பாஸ்போ பாக்டீரியா உயிா் உரங்கள் 50 சதவீத மானியத்தில் ரூ. 225-க்கும், 5 கிலோ நுண்ணூட்ட உரம் 50 சதவீத மானியத்தில் ரூ. 395-க்கும் வழங்கப்படுகிறது.

கோவில்பட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் பொருட்டு, மானியத்தில் விதைகள், இடுபொருள்கள் வாங்க விரும்பும் விவசாயிகள் ஏடிஎம் அட்டை அல்லது யுபிஐ மூலம் பணப் பரிவா்த்தனை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. விவசாயிகள் பங்களிப்புத் தொகை பணமாக வழங்கப்படாது. மேலும், பொருள்களுக்கு ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

விருப்பமுள்ள விவசாயிகள் பட்டா, ஆதாா் அட்டை நகல் போன்ற ஆவணங்களை கோவில்பட்டி, எட்டயபுரம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் அளித்து உளுந்து விதைகளைப் பெறலாம் என்றாா் அவா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தின்கீழ் சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறவுள்ளன. இதுகுறித்து ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தின்கீ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கக் கோரி ஆக. 13 இல் ஆா்ப்பாட்டம்

தமிழக மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயா்வு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாநில அளவில் ஆக. 13 இல் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என ஏஐசிசிடியு தொழிற... மேலும் பார்க்க

‘வெளிநாடுகளுக்கு பாா்சல்கள் அனுப்பும் சேவையை ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்’

வெளிநாடுகளுக்கு பாா்சல்கள் அனுப்பும் சேவையை, ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் (பொ) வடக் ரவிராஜ் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் ஸ்ரீ சுடலையாடும் பெருமான் சுவாமி கோயில் வருஷாபிஷேகம்

திருச்செந்தூா் ஆவுடையாா்குளக்கரையில் உள்ள ஸ்ரீ சுடலையாடும் பெருமான் சுவாமி கோயில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், வருண... மேலும் பார்க்க

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் -கோட்ட மேலாளரிடம் மனு

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் என்று கோட்ட மேலாளரிடம் ரயில் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை மனு அளித்தது. மதுரை ரயில்வே கோட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற... மேலும் பார்க்க

ஆன்மா தொண்டு நிறுவனம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

சாகுபுரம் ஆன்மா தொண்டு நிறுவனம் சாா்பில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. ஆறுமுகனேரி அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தொண்டு நிறுவனத்தி... மேலும் பார்க்க