நியோமேக்ஸ் மோசடி: ரூ.15.5 கோடி சொத்துகளை விற்று பாதிக்கப்பட்டோருக்கு வழங்க போலீஸ...
ஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி இளம்பெண்ணிடம் பணம் பறித்த நபருக்கு போலீஸ் வலை
சென்னை: இளம் பெண்ணின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோவை இணையதளங்களில் வெளியிடுவதாகக் கூறி மிரட்டி பணம் பறித்த போலி போலீஸ் எஸ்ஐயை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் சென்னை நுங்கம்பாக்கம் குமரப்பா, தெருவில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி கொரியர் நிறுவனம் ஒன்றில் பணி செய்கிறார். கடந்த 27ம் தேதி காலை செல்போனில் இளம்பெண்ணை தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தன்னை போலீஸ் எஸ்ஐ என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக இளம் பெண் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தை அணுகிய போதுதான் மர்ம நபர் போலீஸ் எஸ்ஐ இல்லை என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக இளம் பெண் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸ் எஸ்ஐ என மிரட்டிய மர்ம நபரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.