செய்திகள் :

கனமழை, நிலச்சரிவால் சிக்கிமில் 6 பேர் உயிரிழப்பு

post image

குவாஹாட்டி: சிக்கிமில் கனமழை, நிலச்சரிவின் காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிக்கிமுக்கு வந்த 2 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் கனமழையின் காரணமாக சிக்கித் தவிக்கின்றனர்.

இமயமலை அடிவாரத்தில் உள்ள சிக்கிம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தாழ்வான இடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கனமழை, நிலச்சரிவால் இதுவரை சிக்கிமில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.