நியோமேக்ஸ் மோசடி: ரூ.15.5 கோடி சொத்துகளை விற்று பாதிக்கப்பட்டோருக்கு வழங்க போலீஸ...
நெல்லை, கோவை மேயர் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
சென்னை: நெல்லை, கோவை மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மறைமுக தேர்தல் நடத்துவதற்காக மாநகராட்சிக் கூட்டங்களை நடத்தி மேயரை தேர்வு செய்ய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், தற்போது காலியாக உள்ள திருநெல்வேலி மாநகராட்சி மேயர் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவியிடங்களை நிரப்பிடும் பொருட்டு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான மாநகராட்சிகளின் கூட்டங்களை நடத்தி மேயர்களைத் தேர்ந்தெடுத்திட உரிய அறிவுரைகளை தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.மேலும், ஆணையத்துக்கு ஏற்கெனவே அறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பட்ட ஏனைய நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள காலி பதவியிடங்களுக்கும் சேர்த்து மறைமுக தேர்தல்கள் நடத்துவதற்கான கூட்டங்களை நடத்தி அப்பதவியிடங்களை நிரப்பிட உரிய அறிவுரைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.