செய்திகள் :

“தமிழகத்தில் தேர்தல் ஆணையம் சொதப்பல்” - காரணங்கள் அடுக்கும் ஜெயக்குமார்

post image

சென்னை: “தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இந்த முறை சொதப்பிவிட்டது. ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையத்தின் ஒரு தோல்வியாகத்தான் இதை பார்க்க வேண்டும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், சென்னை மண்டல பொறுப்பாளர்கள், வேட்பாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், நட்சத்திரப் பேச்சாளர்கள் அனைவரையும் அழைத்து மக்களவைத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக இந்த தேர்தலைச் சந்தித்த விதம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.