நியோமேக்ஸ் மோசடி: ரூ.15.5 கோடி சொத்துகளை விற்று பாதிக்கப்பட்டோருக்கு வழங்க போலீஸ...
பருவமழை முன்னெச்சரிக்கை: பாதுகாப்பு உபகரணங்களின் இருப்பு விவரம் கோரியது தமிழ்நாடு மின்வாரியம்
சென்னை: பருவமழை முன்னேற்பாடாக பாதுகாப்பு உபகரணங்கள் இருப்பு விவரத்தை சமர்ப்பிக்க பகிர்மானப்பிரிவு தலைமைப் பொறியாளர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழைக்காலம் தொடங்கியுள்ளது. இதுதவிர, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இந்தச் சூழலில், மின் விநியோகம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மின்வாரியம் மிகவும் கவனமாக உள்ளது. இந்நிலையில், தற்போதுள்ள பாதுகாப்பு உபகரணங்கள் கையிருப்பு விவரங்களை மின்வாரியம் கேட்டுள்ளது.