செய்திகள் :

வேலூர்: திடீர் மாரடைப்பு.. உயிர் பிரியும் தறுவாயிலும் பயணிகளைக் காப்பாற்றிய அரசுப் பேருந்து ஓட்டுநர்

post image

வேலூர் அருகேயுள்ள காட்பாடி சில்க் மில் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 59). இவர், பேரணாம்பட்டு பணிமனையில் இருந்து குடியாத்தம், வேலூர், திருப்பத்தூர், அரூர் வழித்தடத்தில் சேலம் வரை இயக்கப்படும் அரசு விரைவு பேருந்தின் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார்.

வழக்கம்போல் இன்று காலை 8 மணிக்குப் பணிக்குவந்த வெங்கடசாமி பணிமனையில் இருந்து பேருந்தை இயக்கிக் கொண்டு புறப்பட்டார்.

குடியாத்தம் வருவதற்குள்ளாக பேருந்தில் சுமார் 25 பயணிகள் இருந்திருக்கின்றனர். குடியாத்தம் கெங்கையம்மன் கோயிலின் புதிய தரைப்பாலம் அருகிலுள்ள நிறுத்தத்ததில் 2 பேர் இறங்குவதற்காக எழுந்ததால் பேருந்தை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது, வெங்கடசாமிக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பேருந்தின் இயக்கம் குறைந்ததால் கடுமையான நெஞ்சுவலியிலும் சாதுர்யமாகச் செயல்பட்டு பேருந்தை சாலையோரம் நிறுத்தினார்.

ஓட்டுநர் மாரடைப்பால் மரணம்
ஓட்டுநர் மாரடைப்பால் மரணம்

அடுத்த நொடி அப்படியே ஸ்டியரிங் மீது சாய்ந்து மயக்கமடைந்தார். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆனாலும், `ஓட்டுநருக்கு என்ன ஆனது?’ என்று பதறிப்போன பயணிகள் விரைந்து சென்று அவரை மீட்டு ஆம்புலன்ஸுக்காகக் காத்திருக்காமல் உடனே குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று அனுமதித்தனர்.

அங்கு பணியில் இருந்த 3 மருத்துவர்கள் தீவிரமாகப் பரிசோதித்தபோதும், ஓட்டுநர் வெங்கடசாமியைக் காப்பற்ற முடியவில்லை. அவர் உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக அவரின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

இது சம்பந்தமாக, குடியாத்தம் நகரக் காவல் நிலைய போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிர் பிரியும் தறுவாயிலும் பயணிகளைக் காப்பாற்றிய தருணம், சக போக்குவரத்து பணியாளர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கி கண்கலங்க வைத்திருக்கிறது.

"ஒரு எம்பி பதவிக்காக திமுக உடன் கூட்டணி வைத்தார்கள்" - பிரேமலதாவுக்கு வன்னி அரசு பதிலடி

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு அமைச்சர் வன்னி அரசு பதிலடி கொடுத்திருக்கிறார். விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் சமீபத்தில் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சியில் பேசியபோது, "நீண்டகாலம் திமுகவோடு... மேலும் பார்க்க

லண்டன் பயணம்: ``முதல்வர் விஜய் செய்தியாளர்களைச் சந்தித்து..." - டி.ஆர்.பி. ராஜா அடுக்கும் கேள்விகள்

முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்க்க லண்டன் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (செப் 17) காலை சென்னை திருப்பினார். இந்தப் பயணம் குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க

செங்கோட்டையனை சுத்துப்போடும் த.வெ.க-வினர் டு மனம் வருந்தும் திருமா | கழுகார் அப்டேட்ஸ்

சஸ்பென்ஸ் வைக்கும் பாமக!இலையா... சூரியனா...மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துவிட்டன. த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சியின் வேட்பாள... மேலும் பார்க்க

அமெரிக்காவின் 100% வரி: "ஏற்கெனவே கூறியபடி மக்களின் நலன்தான்..." - இந்தியாவின் பதில் என்ன?

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 100 சதவிகித வரி விதிப்பதற்கான அமெரிக்காவின் சட்டத்திற்கு, அந்நாட்டின் கீழ்சபையிலும், மேல்சபையிலும் ஒப்புதல் அளிக்கப்... மேலும் பார்க்க

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா; அமெரிக்காவின் 100% வரி பாயுமா? ட்ரம்ப் ஒப்புதல் தருவாரா?

ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல வழிகளில் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தார். வேலைக்கு ஆகவில்லை... நெருக்கடியும் கொடுத்துப் பார்த்தார். ரஷ்யாவை வழிக்குக் கொண்டுவர முடியவில்லை.அமெர... மேலும் பார்க்க