செய்திகள் :

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 2 மணி நேரத்தில் சுமார் 11% வாக்குப்பதிவு

post image

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில் சுமார் 11 சதவிகித வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வாக்குப்பதிவு புதன்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போடப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு தொடங்கியதும் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வாக்களித்தார்.

பின்னர், 95 சதவிகித வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சீட்டைப் பயன்படுத்தியதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜ கோபால் சுன்கரா தெரிவித்தார்.

குளிர் காரணமாக, வாக்குப்பதிவு தொடங்கியபோது மக்கள் அதிக எண்ணிக்கையில் வரவில்லை, ஆனால் பின்னர் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வந்திருந்து வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இதையும் படிக்க | ஈரோடு கிழக்கில் வாக்குப்பதிவு தொடங்கியது!

வாக்குப்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் வாக்காளர்கள் வந்திருந்து வாக்களித்தாகவும், வாக்குப்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில் சுமார் 11 சதவிகித வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வாக்குப்பதிவு எந்த அசம்பாவிதங்களும் இல்லாமல் அமைதியாக நடந்து வருகிறது.

இதனிடையே மக்கள் அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என வலியுறுத்திய திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என செய்தியாளர்களுடனான சந்திப்பில் தெரிவித்தார்.

வழிப்பறியில் ஈடுபட்ட 5 கொள்ளையர்கள் சுட்டுப்பிடிப்பு!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் வழிப்பறி கும்பலைச் சேர்ந்த 5 கொள்ளையர்கள் காவல் துறையினரால் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர். காசியாபாத்தில் நேற்று (பிப்.13) இரவு வியாபாரியான சதீஷ் சந்த் கா... மேலும் பார்க்க

உலக சாதனைக்கு முயன்ற இந்திய வீரர் பலி!

உலக சாதனைக்கு முயன்ற இந்தியாவைச் சேர்ந்த சைக்கிள் வீரர் சிலி நாட்டில் சாலை விபத்தில் பலியாகியுள்ளார். தென் அமெரிக்க கண்டத்தில் அதிவேகமாக 10,000 கி.மீ. தூரத்தை சைக்கிளில் கடந்து உலக சாதனைப் படைக்க முயன... மேலும் பார்க்க

காங்கோவில் 2வது விமான நிலையத்தைக் கைப்பற்றிய கிளர்ச்சிப்படை?

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மற்றொரு விமான நிலையத்தைக் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டின் கிளர்ச்சிப் படையொன்று தெரிவித்துள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவின் ஆதரவுப்பெற்று காங்கோவினுள் இயங்க... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.அந்நாட்டின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 125 கி.மீ. ஆழத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று (பிப்.14) ஏற்பட்டுள்ளதாக தேசிய நில... மேலும் பார்க்க

துணை முதல்வர் நிகழ்ச்சியில் பறந்து வந்த டிரோன்! 2 பேர் கைது!

மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் நிகழ்ச்சியில் அனுமதியின்றி டிரோனை பறக்கவிட்ட 2 பேர் இன்று (பிப்.14) காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாசிக் மாவட்டத்தின் ஹிவாலி பகுதியி... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி!

போப் பிரான்சிஸ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் நகரம் தெரிவித்துள்ளது.ஐரோப்பாவிலுள்ள தன்னாட்சிப் பெற்ற நாடான வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க சபையின் திருத்தந்தையுமான... மேலும் பார்க்க