செய்திகள் :

``உதயநிதியை 'இளைய கலைஞர்' ஆக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்" - ஆர்.எஸ்.பாரதி

post image

தஞ்சாவூரில் நடந்த காவிரி நீருக்கான ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது உதயநிதி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து அவர் இன்று கைது செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ``எல்லா ஆட்சியையும் மிஞ்சக்கூடிய வகையில், சர்வாதிகாரத்தின் உச்சத்தில் நின்று கொண்டு செயலாற்றிக் கொண்டிருக்கிறார். சட்டமன்றம் கூடவிருக்கின்ற இந்த நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவரைைக் கைது செய்வது ஜனநாயக விரோதச் செயல்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

கொலைக் குற்றவாளியாக இருக்கக்கூடியவர்கள் கூட, 'பாராளுமன்றம், சட்டமன்றம் நடக்கும் போது அதிலே கலந்து கொள்வதற்கு எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்' என்று நீதிமன்றத்தில் கோரி, நீதிமன்ற அனுமதியோடு வந்து கலந்துகொண்ட வரலாற்றையெல்லாம் இந்திய ஜனநாயகத்தில் இந்த 75 ஆண்டு காலமாக நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால், 'ஜன நாயகன்' என்ற படத்திலே நடித்தாரே தவிர, ஜனநாயகத்தைப் பற்றி ABC கூட தெரியாத ஒரு முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவருடைய பேச்சைத் திரித்து, அதன் மூலம் கைது செய்திருக்கிறார்கள்.

காவிரி பிரச்னை குறித்து ஏறத்தாழ 40 நிமிடங்கள், இந்த அரசாங்கம் செய்யத் தவறியது என்ன, இந்தப் பிரச்னையை எப்படி அணுக வேண்டும், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி இருக்க வேண்டும் என்பன் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை, இந்த அரசின் மீது முன்வைத்தார். எதிர்க்கட்சித் தலைவர் செய்ய வேண்டிய கடமையாக அவர் செய்தார்.

அந்த நேரத்தில், யாரோ ஒருத்தர் தண்ணீர் வரவில்லை என்ற வைத்தெரிச்சலில் கூட்டத்தில் இருந்த யாரோ ஒருத்தர் `திரிஷா வீட்டுக்குத் தண்ணீர் வருது, அவங்க வீட்டுக்கு மட்டும் வருது' என்று கூட்டத்தில் கேட்டாங்க. `அங்கே மட்டும் வரும்' என்று சொன்னார். அதில் என்ன தவறு இருக்கிறது? அது உலக மகா தவறா?

விஜய்
விஜய்

தண்ணீர் என்பது குடிக்கும் தண்ணீர், அந்தத் தண்ணீருக்கான விளக்கம் என்ன என்பதை நாங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறோம். ஆனால் இதில் என்ன தவறு இருக்கிறது? அதில் என்ன தவறான அர்த்தம் இருக்கிறது?

அப்படியே நான் வாதத்திற்காகக் கேட்கிறேன், திரிஷாவைப் பற்றிப் பேசினால் உடனே இவ்வளவு அவசரம் தேவையா? அந்த அம்மா இந்த நாட்டினுடைய பிரதமரா அல்லது முதலமைச்சரா? அந்த அம்மாவைத் தனிப்பட்ட முறையில் யாரும் ஒன்றும் பேசவில்லையே.

இதெல்லாம் அரசியலில் பக்குவப்பட்டு, போராட்டங்கள் நடத்தி, அரசியல் நடத்தி ஆட்சிக்கு வந்திருந்தால் அதெல்லாம் புரியும். ஜெயலலிதா காலத்தில் நாங்களெல்லாம் பேசியிருக்கிறோம், எடப்பாடி காலத்தில் பேசியிருக்கிறோம், எம்.ஜி.ஆர் காலத்தில் பேசியிருக்கிறோம். என் மீதே 16 வழக்குகள் ஜெயலலிதா காலத்தில் போட்டார்கள். ஆனால் ஒரு வழக்கில் கூட நான் கைது செய்யப்படவில்லை.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

தளபதி ஸ்டாலின் மீது 40 வழக்குகள், ஆனால் ஒரு வழக்கில் கூட கைது செய்யப்படவில்லை. ஆக, இதுபோல வழக்குகளில் கைது செய்வதே கிடையாது.

தஞ்சாவூரில் விவசாயிகள் எல்லாம் பட்டினியில் சாகிறார்கள். அதைப் பற்றி கவனிப்பதற்கு இந்த அரசாங்கத்திற்கு நேரமில்லை. ஒன்று மட்டும் சொல்கிறேன், எங்கள் உதயநிதி ஸ்டாலினை இன்றைக்கு 'இளைய கலைஞர்' ஆக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள்; அரசின் ஈடு இணையற்ற சாதனை"- சீமான் கண்டனம்

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதுதான் தவெக கொடுங்கோன்மை அரசின் ஈடு இணையற்ற சாதனை" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அ... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம் குறித்த சுற்றறிக்கை: "பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்ததா தவெக அரசு?"- கனிமொழி

காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சில நிமிடங்களிலேயே இந்த ... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! - பின்னணி என்ன?

தவெக அமைச்சரவையில் அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும் எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வந்தார். 'திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது' என்று திமுகவிற... மேலும் பார்க்க

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், இலவம் பஞ்சு தோட்டங்களையும் முழுமையாக அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான உத்... மேலும் பார்க்க

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?'- திமுக கேள்வி

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?' என திமுக கேள்வி எழுப்பியிருக்கிறது.இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், `நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

`மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு டி.கே.சிவக்குமார் பேசுவதா?' - சீமான் கண்டனம்

`கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்... மேலும் பார்க்க