செய்திகள் :

`உன் சகோதரியை கர்ப்பமாக்கினாயா?' குழந்தை பெற்று இறந்த பெண்ணின் சகோதரனிடம் டாக்டர் சர்ச்சை கேள்வி

post image

மத்தியபிரதேசம் ரேவா என்ற இடத்தில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டு இருந்த கல்பனா மிஸ்ரா என்ற பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற பிறகு தன்னை மருத்துவமனையில் இருந்து அழைத்துச்செல்லும்படியும், இவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள் என்று அப்பெண் தனது உறவினர்களிடம் கெஞ்சிய வீடியோ வைரலானது. அதோடு மருத்துவமனை படுக்கையில் இருந்து எழுந்து உறவினர்களிடம் ஓடிய அப்பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் பிடித்து நிறுத்தி செல்ல விடாமல் தடுத்த வீடியோவும் வெளியாகி இருந்தது.

ஆனால் துரதிஷ்டவசமாக கல்பனாவும், அவர் பெற்றெடுத்த குழந்தையும் அடுத்த சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையின் போது மருத்துவமனையின் சூப்பிரண்டெண்ட் டாக்டர் ராகுல் மிஸ்ரா இறந்து போன கல்பனா மிஸ்ராவின் குடும்பத்தினருடன் உரையாடிய வீடியோ வைரலாகி பெரிய அளவில் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனை

கல்பனாவின் சிகிச்சை மற்றும் மரணம் குறித்து மருத்துவமனையில் குடும்பத்தினர் கேள்வி எழுப்பியபோது, ​​``உங்கள் 22 வயது சகோதரியை கர்ப்பமாகிவிட்டீர்கள்" என்று ஒரு குடும்ப உறுப்பினரிடம் டாக்டர் மிஸ்ரா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் டாக்டர் மிஸ்ரா இக்குற்றச்சாட்டை மறுத்தார். பின்னர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

இச்சர்ச்சையை தொடர்ந்து சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் பதவியில் இருந்து டாக்டர் ராகுல் மிஸ்ராவை மத்தியப் பிரதேச அரசு நீக்கியுள்ளது. ஆனால் நீக்கத்திற்கான காரணத்தை குறிப்பிடவில்லை.

இது குறித்து மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி கூறுகையில்,'' அரசு டாக்டர் மிஸ்ராவை பாதுகாக்கிறது. துணை முதல்வர் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜேந்திர சுக்லாவுடன் டாக்டர் மிஸ்ராவுக்கு தொடர்பு இருக்கிறது. எனவேதான் தாமதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்ச்சைகள் இருப்பதால் டாக்டர் மிஸ்ரா ஏன் தனது பதவியில் தொடர்கிறார் என்று பட்வாரி கேள்வி எழுப்பினார்.

தூத்துக்குடி: பள்ளி மாணவனை நிர்வாணமாக்கி பிறப்புறுப்பை தாக்கி சித்ரவதை; 9 மாணவர்கள் போக்சோவில் கைது

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் ஒரு மாணவரின் பெற்றோர், தன் மகனுக்கு பாலியல் துன்புறுத்தல் நடப்பதாக விளாத்... மேலும் பார்க்க

திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தை அடித்து உடைத்து மர்ம நபர்கள்; பாஜகவைக் கண்டிக்கும் அபிஷேக் பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி அடைந்த பிறகு அந்தக் கட்சி பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அக்கட்சியின் பெரும்பாலான தலைவர்கள், எம்.பி.க்கள், எம... மேலும் பார்க்க

சேலம்: 4 பவுன் நகைக்காக 8 துண்டுகளாக பெண்ணை வெட்டி மூட்டையில் கட்டிய‌ கொடூரம்; அதிர்ச்சிப் பின்னணி

சேலம் மாவட்டம் அரிசிபாளையம் குணபாலன் ராமசாமி தெருவில் வசித்து வரும் கோயில் பூசாரி ரமேஷ் என்பவர், கடந்த ஆகஸ்ட் 31 அன்று தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். வீட்டின் ... மேலும் பார்க்க

"ரூ.1 லட்சம் முதலீட்டிக்கு ரூ.8000 மாத வட்டி"- ரூ.300 கோடியைச் சுருட்டிய மதுரை செண்பக பாண்டியன் கைது

சேலம் மாவட்டம் ரெட்டிபட்டியைச் சேர்ந்தவர்கள் விஜயராகவன்- ராகினி தம்பதி மற்றும் மதுரையைச் சேர்ந்த செண்பக பாண்டியன் ஆகிய மூவரும் சேர்ந்து பிராஃபிட் எவர் டிரேடர்ஸ் என்கிற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை 2024... மேலும் பார்க்க

டைம்ஸ் சதுக்கம்: பேங்க் ஆஃப் அமெரிக்கா பெண் அதிகாரி கொலை - நொடியில் முடிந்த இளம் தாயின் வாழ்கை

ஐந்து மாதக் குழந்தை, அன்புக் கணவன், பெருமைக்குரிய வங்கிப் பணி... மகிழ்ச்சியின் உச்சத்தில் மிதந்துகொண்டிருந்த ஒரு இளம் தாயின் வாழ்க்கை, ஒரு நொடியில் சிதைந்துபோன கொடூரம் அமெரிக்காவை அதிர்ச்சியில் உறைய வ... மேலும் பார்க்க

`காலனிக்காரனுங்க உட்கார்ந்ததால் நாற்காலியைக் கொளுத்திட்டேன்’ - முன்னாள் ஊராட்சித் தலைவரின் சாதிவெறி

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் ஒன்றியத்துக்குட்பட்ட கொசவன்புதூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் சந்திரபாபு, வயது 52. இவர் அந்த ஊராட்சியின் முன்னாள் மன்றத் தலைவராக இருந்தவர். தற்போது, இவரின் மனைவி புவனேஸ்வரி க... மேலும் பார்க்க