செய்திகள் :

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருந்த பாக். சூப்பர் லீக் ஒத்திவைப்பு!

post image

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நீடித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவத்தினரும் எல்லையோர மாநிலங்களில் மே 8, 9ஆம் தேதி நள்ளிரவில் ட்ரோன் தாக்குதல் நடத்தினர்.

பாகிஸ்தானின் தொடர் ட்ரோன் தாக்குதலை, இந்திய வான் பாதுகாப்புப் பிரிவு துல்லிய தாக்குதல் நடத்தி அனைத்தை ட்ரோன்களையும் அழித்தொழித்தது. மேலும், இந்திய ட்ரோன்கள் நடத்திய தாக்குதலில், ராவல்பிண்டி கிரிக்கெட் திடலுக்கு அருகில் இருந்த கட்டடங்கள், கடைகள், வணிக வளாகங்கள் கடுமையாக சேதமடைந்தன.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கிருந்தும் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், உள்துறை அமைச்சருமான மோஹ்சின் நக்வி வெள்ளிக்கிழமை, அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்தது, போர்ப் பதற்றம் குறித்து கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பிரதமரின் ஆலோசனையைப் பின்பற்றி, இந்தத் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க:பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது! - விக்ரம் மிஸ்ரி

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி; ஆயுஷ் மாத்ரே கேப்டன்!

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 19 வயதுக்குட்படோருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (மே 22) அறிவித்துள்ளது.19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநா... மேலும் பார்க்க

எம்பிஎல் டி20 லீக் போட்டிகள் நடைபெறும் இடம், தேதி மாற்றம்!

மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவிருந்த எம்பிஎல் டி20 லீக் தேதி, இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட்டுகள் பிரபலமாகி வரும் நிலையில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் டி20 லீக் ப... மேலும் பார்க்க

வங்கதேச தொடர்: பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது ரிஸ்வானுக்கு இடமில்லை!

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்டர்கள் மற்றும் முன்னாள் கேப்டன்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் அ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் - வங்கதேசம் டி20 தொடர்: 5 போட்டிகள் அல்ல; 3 போட்டிகளாக குறைப்பு!

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் போட்டிகள் குறைக்கப்பட்டுள்ளன.வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மே 25 முதல் ஜூன் 3 வரையிலான இடைவெளியில் 5 போட்டிகள் கொண்ட ட... மேலும் பார்க்க

கடைசி ஓவரில் த்ரில்லர்: ஐக்கிய அரபு அமீரகம் வரலாற்று வெற்றி!

வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. சார்ஜாவில் நடைபெற்ற டி20 போட்டியில் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் 205/5 ரன்கள் எடுத்தத... மேலும் பார்க்க

ஓய்வு முடிவை திரும்பப் பெற்று ரோஹித், விராட் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும்: முன்னாள் வீரர்

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி அவர்களது ஓய்வு முடிவினை திரும்பப் பெற்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டினைக் காப்பாற்ற வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க