செய்திகள் :

"கட்டுமானச் செலவே ரூ.4 கோடி தான்; முதல்வரின் திறப்பு விழாவுக்கு ரூ.5 கோடி செலவு!" - நயினார் தாக்கு

post image

திருச்சியில் பா.ஜ.க மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

"கடந்த ஜூன் 12ந-ம் தேதி திறக்கப்பட்டிருக்க வேண்டிய மேட்டூர் அணை, உரிய நேரத்தில் திறக்கப்படவில்லை. தற்போது, அணையைத் திறந்து வைக்க முதலமைச்சர் சென்றதற்கே 5 கோடி ரூபாய் வரை மக்கள் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை கட்டப்பட்ட காலத்தில் அதன் மொத்த கட்டுமானச் செலவே 4 கோடி ரூபாய் தான். ஆனால், இப்போது வெறும் அணை திறப்பு விழாவுக்கு இவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது. ஒரு காஸ்ட்லி முதலமைச்சராக விஜய் செயல்படுகிறார். காவிரி நீரைத் திறந்து விடக் கோரி கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். ஆனால், முதலமைச்சர் இதுகுறித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

இத்தனைக்கும் தமிழக ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிதான் கர்நாடகாவில் ஆட்சி செய்கிறது. அப்படியிருந்தும், தமிழக அரசு காவிரி நீரைப் பெற அழுத்தம் தராமல் மௌனம் காப்பது ஏன்? தற்போது, திறந்து விடப்பட்டுள்ள காவிரி நீர், கடைமடைப் பகுதிகளுக்குச் சென்று சேரவே குறைந்தது 12 நாட்கள் ஆகும். முறையான பாசன நீர் கிடைக்காததால் ஏற்கனவே 2 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் பயிரிடப்படாமல் பாழாகிக் கிடக்கின்றன. இதனால், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்குத் தமிழக அரசு உடனடியாக உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவுப்படி, ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி தண்ணீரும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சேர்த்து 94 டி.எம்.சி தண்ணீரும் கர்நாடகா திறந்து விட்டு இருக்க வேண்டும். ஆனால், அந்த அளவிற்குத் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால், தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் முதலமைச்சர் நிறைவேற்றவில்லை. இதுதான் த.வெ.க அரசின் தற்போதைய அவல நிலை. சட்டமன்ற நடைமுறைகளில் தேவையின்றி மத விவகாரங்களைப் புகுத்துகிறார்கள். இந்துக்களும் இதுபோன்று தங்கள் மதம் தான் முக்கியம் எனக் கூறத் தொடங்கினால், இந்த அரசு நீடிக்குமா என்பதை ஆட்சியாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இங்குள்ள கூட்டணிக் கட்சிகளுக்குள் எந்தவொரு கொள்கை ஒற்றுமையும் இல்லை. காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்கிறார்கள். ஆனால், த.வெ.க தரப்பிலோ, 'விஜய்தான் பிரதமர் வேட்பாளர்' என்கிறார்கள். பிரதமராவதற்கு யாருக்குத் தகுதி இருக்கிறது என்பது இரண்டாவது விஷயம். ஆனால், தங்களுக்குள் இப்படி ஒருமித்த கருத்து இல்லாமல் முரண்பட்டுக் கொண்டிருக்கும் இவர்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நன்மைகளைச் செய்யப் போகிறார்கள்? மற்றொருபுறம், காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் தன் பதவியை ராஜினாமா செய்வேன் என்று மிரட்டுகிறார். இப்படித்தான் தற்போதைய அரசு குழப்பமாகச் சென்று கொண்டிருக்கிறது. சட்டமன்ற நேரலையை மக்கள் மிகவும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பதாக அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அவையில் நடக்கும் தரம் தாழ்ந்த விவாதங்களையும், ஆட்சியாளர்களின் செயல்பாடுகளையும் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்" என்றார்.

``கொளத்தூரின் தேர்தல் முடிவுகள் வாக்கு பதிவு இயந்திரங்களினால் வந்ததே..!"- என்.ஆர்.இளங்கோ திட்டவட்டம்

கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பு குறித்து தி.மு.க சட்டத்துறைச் செயலா... மேலும் பார்க்க

`இது முட்டாள்தனமானது' Vs `சமநிலையைப் பேண முடியும்' - TRB ராஜா - கீர்த்தனா கருத்து மோதல்!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலையில், ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா சட்டமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, ``எங்கள் பகுதியில் இயங்கி வரும் ஜே.கே. டயர் நிறுவனம் இரவோடு இரவா... மேலும் பார்க்க

`பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட மாணவிகள்; தீண்டாமை... உளவியல் ஒடுக்குமுறை!' - மாணிக்கம் தாகூர்

புதுக்கோட்டை அருகே ஓடும் அரசுப் பேருந்தின் கதவு திடீரென திறந்ததில், பேருந்தில் பயணம் செய்த 10 பள்ளி மாணவிகள் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள... மேலும் பார்க்க

மேகதாது: ``மேலும், மேலும் முன்னேறும் கர்நாடக அரசு... ஆனால், நாம்?" - அன்புமணி வலியுறுத்தல்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு விரைவாக அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையத் தலைவர் அனுபம் பிரசாத்தை, கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சாலுவராய சாமி நேரில் சந்தித்து வலியுறுத... மேலும் பார்க்க

விதி 110: ``நம்பி வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகம்" - சீமான் காட்டம்

கடந்த ஆகஸ்ட் 05- ம் தேதி முதல் தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாள்தோறும் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களும், அத்துறை தொடர்பான அறிவிப்புகளும... மேலும் பார்க்க

TN Assembly : முதல்வர் விஜய் Vs எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி; அவையில் அனல் பறந்த விவாதம் | Full Story

சட்டமன்றத்தில் முதல்வர் கையில் வைத்திருக்கும் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதில் முதல்வர் விஜய்யும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் காரசாரமாக கருத்துகளை பகிர்ந்து கொண்டன... மேலும் பார்க்க