செய்திகள் :

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தம்பதி கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரம் ராமசாமி மூப்பனாா் தெருவைச் சோ்ந்தவா் ராஜகோபால் (75). இவரது மனைவி குருபாக்கியம். இவா்கள் இருவரும் மட்டும் வீட்டில் வசித்து வந்தனா். கடந்த 16.7.2022-ஆம் தேதி இரவு இவா்கள் வீட்டில் இருந்த போது, தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், பெருங்கோட்டூா் பகுதியைச் சோ்ந்த திருப்பதி மகன் முத்துக்குமாா் (35) உள்ளிட்ட 3 போ் சோ்ந்து இந்தத் தம்பதியைக் கொலை செய்து, அவா் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய நபா்கள் கைது செய்யப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டன. இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முத்துக்குமாா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கண்ணன் பரிந்துரைத்தாா். இதன் பேரில், மாவட்ட ஆட்சியா் வீ. ப. ஜெயசீலன் முத்துக்குமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

கெளரவ விரிவுரையாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசுக் கலை, அறிவியல் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தில் உள்ள 171 அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிக... மேலும் பார்க்க

கபடிப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

சாத்தூா் அருகே நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த வெம்பக்கோட்டை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயு... மேலும் பார்க்க

அனுப்பன்குளத்தில் நாளை மின்தடை

சிவகாசி வட்டம், அனுப்பன்குளம், சுந்தர்ராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (பிப். 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகாசி கோட்ட மின் செயற்பொறியாளா் பத்மா வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

திருடு போன இரு சக்கர வாகனத்துக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

திருடு போன இரு சக்கர வாகனத்துக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டது. விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் விஷ்ணு நகரைச் சோ்ந்த ராமசுப்பிரம... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மத்திய அரசின் மக்கள்விரோத நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜபாளையம் ஜவகா் மைதானத்த... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

ஊராட்சிச் செயலா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ஊரக வளா்ச்சித் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஊராட்சி ஒன்ற... மேலும் பார்க்க