செய்திகள் :

குருகிராமில் இளம்பெண் சென்ற பைக்கை மோதிய கார்; ராஜஸ்தானில் வைத்து இளைஞரைக் கைதுசெய்த போலீஸ்!

post image

டெல்லி அருகில் உள்ள குருகிராமில் ஷிவானி என்ற பெண் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது கல்யான் என்பவர் காரில் அவரை விரட்டிச் சென்றார். ஒரு கட்டத்தில் அப்பெண்ணின் வாகனத்தின் மீது மோதிவிட்டு அங்கிருந்து காரில் கல்யான் தப்பிச் சென்றுவிட்டார். அப்பெண் இரு சக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட காணொலி சமூக வலைதளத்தில் வைரலானது. இது தொடர்பாக கல்யான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஷிவானி கோரிக்கை விடுத்து இருந்தார். `பெண்களை இடித்துவிட்டுச் சென்றால் எதுவும் செய்ய முடியாது என்று நினைக்கிறார். இது ஒரு கொலை முயற்சி' என்றும் ஷிவானி குறிப்பிட்டு இருந்தார்.

சாலையில் விழுந்து கிடக்கும் ஷிவானி

ஆனால் ஷிவானி தனது நண்பர்களுடன் சேர்ந்து இரு சக்கர வாகனத்தை ஓட்டும்போது தனது வாகனத்தின் முன்பு வந்து அடிக்கடி வாகனத்தின் வேகத்தை குறைத்ததாக கல்யான் குறிப்பிட்டு இருந்தார். சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் குருகிராம் போலீஸார் கல்யான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். ஆனால் , பைக் ஓட்டுபவர் ஆணா அல்லது பெண்ணா என்பது தனக்குத் தெரியாது என்றும், சம்பவத்தின் ஒரு பக்கம் மட்டுமே காணொலியில் முன்வைக்கப்பட்டதாக கல்யான் பேட்டி ஒன்றில் கூறினார்.

மேலும் ஷிவானியின் ஆண் நண்பர் ஒருவர் சம்பந்தப்பட்ட காணொளிகள் ஏன் வெளிவரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்நிலையில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டதால் ராஜஸ்தானில் உள்ள தௌசா என்ற இடத்தில் கல்யான் கைதுசெய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

காவல் நிலையத்தில் வைத்திருந்த 7 புகையிலை மூட்டைகளை காரில் கடத்திய ஏட்டு; கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

கேரள மாநிலத்தில் `ஆப்ரேஷன் தூஃபான்' என்ற பெயரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத விற்பனைக்கு எதிராக போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வயநாடு மாவட்டம், சுல்தான் பத்த... மேலும் பார்க்க

ஆம்னி பஸ்களில் பெண்களின் கைப்பையே குறி; தொடர் நகைக் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் சிக்கியது எப்படி?

நெல்லை மாவட்டம்,பாளையங்கோட்டை பிலிப் காலனியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் சகாயராஜ். இவரது மனைவி ஜூலியட் லதா, தனியார் கல்லூரி உதவி பேராசிரியர். இருவரும் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இரவு நெல்லையில் இருந்து சென்னைக்... மேலும் பார்க்க

`பணம் தர்றேன், கேஸ் கொடுக்காதீங்க…' - ஆசிரியரின் தொடர் பாலியல் அத்துமீறல்; அரசுப்பள்ளி மாணவி தற்கொலை

``விஷம் குடிச்சிட்டேன்… செத்துடுவேன்னு பயமா இருக்கும்மா…"கள்ளக்குறிச்சி மாவட்டம்,சின்னசேலம் பகுதியில் சுமார்400மாணவிகளுடன் இயங்கி வரும் அந்த அரசுப் பள்ளியில்,பத்தாம் வகுப்பு படித்து வந்தார் கவிதா (மாண... மேலும் பார்க்க

விக் அணிந்து ஆள்மாறாட்டம்; போலி பெயர்களில் ரூ.30 கோடி மோசடி செய்தவர் கைது; வெளியான பகீர் தகவல்கள்

மும்பை காந்திவலியைச் சேர்ந்த சஞ்சய் ஹிராலால் ஷா (60) என்பவர் தனது குடும்பத்திடம் பங்குச்சந்தையைப் பயன்படுத்தி ரூ.10.81 கோடி மோசடி செய்யப்பட்டுவிட்டதாகக் கூறி மும்பை போலீஸ் கமிஷனர் தேவன் பார்தியிடம் கட... மேலும் பார்க்க

மனைவியின் தலையை வெட்டி பிரிட்ஜில் வைத்த கணவன்; போலீஸிடமிருந்து தப்பிக்க முயலும்போது விபரீதம்

அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த ராமானுஜ் கோஸ்வாமி (30) என்பவர் தனது மனைவி ரியா என்பவரைக் கொலை செய்துவிட்டு தலையைத் துண்டித்து பாலிதீன் பேக்கில் வைத்து பிரிட்ஜில் வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். ப... மேலும் பார்க்க

பிற ஆண்களுடன் பேசுகிறார்: சென்னையில் இருந்து காதலியை வரவழைத்து ஹோட்டல் அறையில் குத்திக்கொன்ற காதலன்

அசாம் மாநிலம் உடல்புரி மாவட்டத்தைச் சேர்ந்த அபிஜித் கிண்டோ, குரியா என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். குரியா சென்னையில் தங்கி இருந்தார். குரியா சென்னையிலிருந்து வேறு இரண்டு பெண்களுடன் அசாமில் உள்ள கம்ரூ... மேலும் பார்க்க