செய்திகள் :

`கோவை தெற்கு தொகுதி தேர்தலை நிறுத்துங்கள்' - தர்ணாவில் இறங்கிய அதிமுக வேட்பாளர்!

post image

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் அதீத பணப்பட்டுவாடாவைத் தடுக்கத் தவறியதாக தேர்தல் அதிகாரிகளைக் கண்டித்தும், தேர்தலை நிறுத்தக் கோரியும் அ.தி.மு.க வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்று உள்ளதால், ஆட்சியர் அலுவலகப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

ஒரு ஓட்டுக்கு ஐயாயிரம் ரூபாய் வரை ரகசியமாக விநியோகிக்கப்படுகிறது என அம்மன் அர்ஜுனன் ஆவேசமாக குற்றம்சாட்டினார். முறையாகப் புகார் அளித்தும் தேர்தல் அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாகவும், இதனால் நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார். போராட்டம் குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், அம்மன் அர்ஜுனன் மற்றும் நிர்வாகிகளுடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும், "மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரி நேரில் வந்து உரிய விளக்கம் அளிக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம்" என அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

அ.தி.மு.க. போராட்டம்
அ.தி.மு.க. போராட்டம்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அம்மன் அர்ஜுனன், “வெளி மாவட்ட நபர்கள் (கரூர்க்காரர்கள்) தொகுதியில் தங்கிப் பணப்பட்டுவாடா செய்வதை அதிகாரிகள் தடுக்கவில்லை. சி.சி.டி.வி ஆதாரங்களுடன் புகார் அளித்தும், பறக்கும் படையினர் உரிய நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள். தெற்கு தொகுதியில் வரலாறு காணாத அளவில் பண விநியோகம் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர்” என்றார்.

இதையடுத்து அங்கு வந்த மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்த அம்மன் அர்ஜுனன், தேர்தல் நாளன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதிக்கக் கோரி மனு அளித்தார். பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்ததை அடுத்து, அம்மன் அர்ஜுனன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கிளம்பிச் சென்றனர். முன்னதாக ஆதரவாளர்களிடம் பேசிய அவர், “இதற்கு முன்பு பல லட்சம் ரூபாய் பணத்தை ஆதாரத்துடன் பிடித்துக் கொடுத்துள்ளோம். ஆனால் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போதும், வடகோவை பகுதியில் தி.மு.க நிர்வாகிக்கு சொந்தமான லாட்ஜில் வைத்து கரூர்காரர்கள் பணத்தை விநியோகிக்கின்றனர். ஆனாலும் ஆதாரம் கேட்கிறார்கள். கோவை தெற்கு தொகுதியில் ஜனநாயகத்தை காக்க நாமே முயற்சி மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

`கோவை தெற்கு தொகுதி தேர்தல் ரத்தா?' - மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் செந்தில் பாலாஜியும், அ.தி.மு.க. சார்பில் அம்மன் அர்ச்சுணனும் போட்டியிடுகின்றனர். தி.மு.க-வினர் வாக்காளர்களுக்கு ரூ.5 ஆயிரமும், அ.தி.மு.க-வினர் ஆயிரம் ரூபாயும் ... மேலும் பார்க்க

‘கோவை தெற்கில் தி.மு.க வாக்காளர்களுக்கு ரூ.5,000 பட்டுவாடா செய்ததா?’ – செந்தில் பாலாஜி விளக்கம்

கோவை காந்திபுரம் பகுதியில் கோவை தெற்கு தொகுதி தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தி.மு.க 2.0 ஆட்சி அமைந்த உடன் ஒரு லட்சம் கோடி ரூபாயில் கோவை மாவட... மேலும் பார்க்க

தமிழ்நாடு தேர்தல்: இன்று 6 மணியோடு எல்லாம் 'க்ளோஸ்'- விதிப்படி எதற்கெல்லாம் 'நோ' - மீறினால்?

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் கடைசி மணிநேர அனலில் இருக்கிறது.இன்று மாலை 6 மணிக்கு மேல், 'நோ' தேர்தல் பரப்புரை, 'நோ' தேர்தல் பிரசாரம், 'நோ' வாக்கு சேகரிப்பு என தேர்தல் சம்பந்தமான அனைத்திற்கும் 'நோ'. ... மேலும் பார்க்க

கோவை தெற்கு: "23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை மக்கள் கிழிப்பார்கள்" - அண்ணாமலை காட்டம்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசனின் இறுதி நாள் வாக்கு சேகரிப்பு வாகனப் பேரணி சிவசக்தி காலனி பகுதியில் துவங்கியது.இப்பேரணியை பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை துவக்க... மேலும் பார்க்க

நெல்லை: பாஜக வேட்பாளரை ஆதரித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நடத்திய 'Road Show'! | Photo Album

நெல்லை: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 'ரோடு ஷோ' தேர்தல் பிரச்சாரம் புகைப்படங்கள்! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி, பாஜக பறக்கவிட துடித்த காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: மு.க. ஸ்டாலின் மேலும் பார்க்க

திருநெல்வேலி: அனல் தெறிக்கப் பேசிய வைகோ; தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் புகைப்படங்கள் | Photo Album

திருநெல்வேலி: அனல் தெறிக்க பேசிய வைகோ! தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் புகைப்படங்கள்.!``மோடியும் அமித் ஷாவும் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் பாஜக வெற்றி பெற முடியாது" - வைகோ மேலும் பார்க்க