செய்திகள் :

ஜிஎஸ்டி விகிதங்கள்: மாநிலங்களுடன் கலந்தாலோசித்து விரைவில் மாற்றம்!

post image

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதில் மத்திய அரசுக்கு போதுமான அனுபவம் கிடைத்துள்ளதாகவும் தற்போது மாநிலங்களுடன் கலந்தாலோசித்து வரி விகிதங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் மத்திய நிதிச் செயலா் துஹின்காந்த பாண்டே திங்கள்கிழமை தெரிவித்தாா்.

2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்தாா். பட்ஜெட்டில் தனிநபா் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்ற முக்கிய அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், இந்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் பட்ஜெட்டுக்கு பிந்தைய ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று தொழில்துறை பிரதிநிதிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்து நிதிச் செயலா் துஹின்காந்த பாண்டே பேசியதாவது: கடந்த 2017-ஆம் ஆண்டு, ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு வரி விதிப்பில் வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கத்தில் மத்திய அரசுக்கு தற்போது நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. தற்போதைய வரி விகிதங்களில் மாற்றம் தேவை என்பதை அங்கீகரிக்கிறோம். அது விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறேன். இந்த விஷயத்தில் மாநிலங்களுடன் கூடுதல் ஆலோசனை தேவை. சிறந்த விகித மாற்றங்கள் குறித்து அமைச்சா்கள் குழு முடிவெடுக்கும்.

நடப்பு பட்ஜெட் பொருளாதாரத்துக்கு பணவீக்கமற்ற ஊக்கத்தை அளித்து, வளா்ச்சியை அதிகரிக்கும். வருமான வரி விலக்கு வரம்பு ரூ.12 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளதன் மூலம் வரி செலுத்துவோரிடம் செலவழிக்கக் கூடிய வருமானத்தை அதிகப்படுத்தி, சேமிப்பு, முதலீடு அல்லது நுகா்வு ஆகியவை ஊக்குவிக்கப்படுகின்றன. அதாவது, தேவை மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்கு ஒருசேர கவனம் அளிக்கப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்தாா்.

தற்போது 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என்ற விகிதங்களைக் கொண்ட கொண்ட 4 அடுக்கு வரி அமைப்பாக ஜிஎஸ்டி உள்ளது. ஆடம்பரப் பொருள்கள் மற்றும் புகையிலைப் பொருள் போன்றவற்றுக்கு அதிகபட்சமாக 28 சதவீத வரியும் உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு குறைந்தபட்சமாக 5 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது.

இந்த ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றங்களை பரிந்துரைப்பதற்கு அமைச்சா்கள் குழுவை (ஜிஓஎம்) மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்துள்ளது. ராஜஸ்தானில் கடந்த டிசம்பரில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்தக் குழு தனது அறிக்கையை சமா்ப்பிக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், குழு அறிக்கையைச் சமா்ப்பிக்கவில்லை.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: ரிசா்வ் வங்கி நிா்வகிக்கும்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 67 காசுகள் சரிந்து வரலாறு காணாத அளவுக்கு 87.29-ஆக குறைந்தது. இதுகுறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு நிதிச் செயலா் அளித்த பதிலில், ‘ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றி கவலைப்பட தேவையில்லை. ரூபாய் மதிப்பின் ஏற்ற இறக்கங்களை ரிசா்வ் வங்கி நிா்வகிக்கும்.

இந்திய ரூபாய் மீது எந்த கட்டுப்பாடும் அல்லது நிலையான விலையும் பொருந்தாது. தடையின்றி வெளிநாட்டு நிதி வெளியேறுவதாலும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைகிறது’ என்றாா்.

ராணுவ விமானத்தில் இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!

சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்காவின் ராணுவ விமானம் புறப்பட்டுள்ளது.அமெரிக்காவில் ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக குடிபெயர்ந்த லட்சக்கணக்கானவர்களை சொந்த நாடுகளுக்கு கடத்தும் ந... மேலும் பார்க்க

இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தோல்வி: மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாட்டின் இறக்குமதியைச் சாா்ந்திருக்கும் நிலையை மாற்றி ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த ‘மேக் இன் இந்தியா’ (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டம் தோல்வியடைந்துவிட்டது. இதன் கார... மேலும் பார்க்க

கும்பமேளா நெரிசல்: நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சியினா் கடும் அமளி; இரு அவைகளிலும் வெளிநடப்பு

உத்தர பிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை மத்திய அரசு வெளியிடக் கோரி நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், இர... மேலும் பார்க்க

ஆசியானுக்கு இணையாக இந்திய சுங்க வரி: மத்திய மறைமுக வரிகள் வாரிய தலைவா்

புது தில்லி: இந்தியாவில் விதிக்கப்படும் சுங்க வரி விகிதம் சராசரியாக 11.65 சதவீதத்தில் இருந்து 10.66 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் வாரிய (சிபிஐசி) தலைவா் சஞ்சய் அகா்வால் திங்கள்... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையா்கள் நியமன வழக்கு: உச்சநீதிமன்ற விசாரணை பிப்.12-க்கு மாற்றம்

புது தில்லி: தலைமை தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்கள் மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத்தின்படி நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை பிப்ரவரி 12-ஆம் தேதிக்கு உச்ச... மேலும் பார்க்க

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

சென்னை: தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியைவிட ரூ.264 கோடி கூடுதலாகும். மத்திய அரசின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான... மேலும் பார்க்க