செய்திகள் :

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் வாங்க செயலி; தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பு - விவரம் என்ன?

post image

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், அதைத் தடுப்பதற்காக தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் புதிய நடைமுறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

மதுபானம்

இதற்காக 'எண்ட் டு எண்ட்' என்னும் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி மூலம் மது பிரியர்கள் தங்களுக்கு அருகிலுள்ள டாஸ்மாக் கடைகள் எங்கிருக்கின்றன, அங்கு என்னென்ன மது வகைகள் இருக்கின்றன மற்றும் அவற்றின் விலை என்ன என்பதைத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.

மேலும், பயன்பாட்டாளர்கள் தங்களுக்கு விருப்பமான மது பாட்டிலைத் தேர்வுசெய்து 'Google Pay' போன்ற ஆன்லைன் செயலிகள் மூலம் பணத்தைச் செலுத்தலாம். பணம் செலுத்தியதும் அவர்களின் செல்போனுக்கு ஒரு 'கியூஆர்' குறியீடு அனுப்பப்படும்.

Google Pay
Google Pay

அதனை சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் காண்பிக்கும் போது, ஊழியர்கள் அதைச் சரிபார்த்து உடனடியாய் மது பாட்டிலை வழங்கிவிடுவார்கள். இதனால் கூடுதல் கட்டணம் வசூலிப்பது முற்றிலுமாகத் தடுக்கப்படும்.

இந்தப் புதிய திட்டத்தை அமல்படுத்தும் பொருட்டு முதற்கட்டமாக மாவட்டந்தோறும் உள்ள சூப்பர்வைசர்களுக்கும், அதைத் தொடர்ந்து விற்பனையாளர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள்; அரசின் ஈடு இணையற்ற சாதனை"- சீமான் கண்டனம்

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதுதான் தவெக கொடுங்கோன்மை அரசின் ஈடு இணையற்ற சாதனை" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அ... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம் குறித்த சுற்றறிக்கை: "பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்ததா தவெக அரசு?"- கனிமொழி

காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சில நிமிடங்களிலேயே இந்த ... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! - பின்னணி என்ன?

தவெக அமைச்சரவையில் அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும் எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வந்தார். 'திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது' என்று திமுகவிற... மேலும் பார்க்க

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், இலவம் பஞ்சு தோட்டங்களையும் முழுமையாக அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான உத்... மேலும் பார்க்க

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?'- திமுக கேள்வி

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?' என திமுக கேள்வி எழுப்பியிருக்கிறது.இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், `நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

`மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு டி.கே.சிவக்குமார் பேசுவதா?' - சீமான் கண்டனம்

`கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்... மேலும் பார்க்க