செய்திகள் :

தமிழ்நாட்டில் தொடங்கியது `அமைதி நேரம்’ - ஓய்ந்தது 2026 சட்டமன்றத் தேர்தல் பிரசாரம்!

post image

தமிழ்நாட்டின் சட்டப்பேரவைத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டின் தேர்தலில் இம்முறை தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க, நா.த.க எனப் பலமான நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியுள்ள நிலையில், 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவை அமைதியாக நடத்த 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுமார் 4.74 லட்சம் தேர்தல் பணியாளர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான் உள்ளிட்ட தலைவர்களும், பிரதமர் மோடி, ராகுல் காந்தி போன்ற தேசியத் தலைவர்களும் தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக வாக்குச் சேகரித்தனர்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

இந்த நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. பிரசாரம் ஓய்ந்த பிறகு, வாக்குப்பதிவு முடியும் வரையிலான 48 மணி நேரம் 'அமைதி நேரமாக' அறிவிக்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் ஊடகங்கள் வழியாகவோ அல்லது நேரடியாகவோ பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 21 முதல் 23 வரை டாஸ்மாக் கடைகளை மூடவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 23-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அண்ணா நகர் 2026! - சிற்றரசின் ‘செக்-மேட்’ பாலிடிக்ஸ்!

சென்னை என்றாலே அது ‘திமுகவின் கோட்டை’ என்பது அரசியல் பாலபாடம். அதிலும் விஐபிக்களும், நடுத்தர வர்க்கத்தினரும், அடித்தட்டு மக்களும் சரிவிகிதத்தில் கலந்திருக்கும் அண்ணா நகர் தொகுதியின் களம், 2026 சட்டமன்... மேலும் பார்க்க

``கடைசி நேர ரிப்போர்ட்... கடுப்பான ஸ்டாலின்” - வேகம் எடுத்த உடன்பிறப்புகள்!

உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டும், சில தொகுதிகளில் கட்சியினர் காட்டும் சுணக்கமும் தி.மு.க தலைமையை டென்சனாக்கியுள்ளது. இரண்டு நாட்களுக்குள் முழுவீச்சில் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டுமென முதல்வர் கட... மேலும் பார்க்க

`கரூர் விஷயத்துக்கு வரேன்... நான் போலீஸ் கொடுத்த டைம்க்குதான் வந்தேன்.!' - விஜய் ஓப்பன் டாக்

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தின் கடைசி நாளான இன்று, நந்தனம் YMCA மைதானத்தில் தவெக தலைவர் விஜய் தனது கடைசி பிரசார உரையை ஆற்றியிருந்தார்.விஜய் பேசியதாவது, ``தமிழ்நாட்டுல இதுவரைக்கும் வாங்காத அளவுக்க... மேலும் பார்க்க