செய்திகள் :

தூத்துக்குடி: பள்ளி மாணவனை நிர்வாணமாக்கி பிறப்புறுப்பை தாக்கி சித்ரவதை; 9 மாணவர்கள் போக்சோவில் கைது

post image

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் ஒரு மாணவரின் பெற்றோர், தன் மகனுக்கு பாலியல் துன்புறுத்தல் நடப்பதாக விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில், ”எனது மகனை இதே வகுப்பில் பயிலும் 9 மாணவர்கள் அவ்வப்போது ராகிங் செய்து வந்துள்ளனர். அத்துடன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக என் மகனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான என் மகன் பல நாட்கள் பள்ளிக்குச் செல்லாமல் இருந்தான்.

விளாத்திகுளம் காவல் நிலையம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு என் மகனுக்கு உடல் நிலை பாதிக்கபட்டபோது அவனிடம் விசாரித்தோம். அப்போதுதான் சக மாணவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததை தெரிந்து கொண்டோம். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளோம். அந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில், பாலியல் தொல்லை கொடுத்து வந்த மாணவர்கள் பாதிக்கப்பட்ட மாணவரை வகுப்பறையில் நிர்வாணமாக்கி பிறப்புறுப்பில் ரப்பர் பேண்ட், ஸ்கேல் ஆகியவற்றால் கொடூரமாக அடித்துள்ளனர். மிளகாய் பொடி தூவியும், பபிள்கான் ஒட்டியும் சித்ரவதை செய்துள்ளனர். இதனையடுத்து 9 மாணவர்களையும் கைது செய்த போலீஸார் தூத்துக்குடி சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டையில் உள்ள இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

வகுப்பறையில் மாணவர் ஒருவருக்கு சக மாணவர்கள் பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தலைமை ஆசிரியருக்கு தெரிய வந்தும் சம்மந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

விளாத்திகுளம்

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராணியிடம் பேசினோம், “கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் எங்களுக்கு இந்த தகவல் கிடைத்தது. இந்த சம்பவம் கிராபட் வகுப்பின் போது ஆசிரியருக்கு தெரிந்துள்ளது. அவர்தான் பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோருக்கு தகவல் கூறியுள்ளனர். இதுதொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியரிடம் விளக்க அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.  

`உன் சகோதரியை கர்ப்பமாக்கினாயா?' குழந்தை பெற்று இறந்த பெண்ணின் சகோதரனிடம் டாக்டர் சர்ச்சை கேள்வி

மத்தியபிரதேசம் ரேவா என்ற இடத்தில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டு இருந்த கல்பனா மிஸ்ரா என்ற பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை... மேலும் பார்க்க

திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தை அடித்து உடைத்து மர்ம நபர்கள்; பாஜகவைக் கண்டிக்கும் அபிஷேக் பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி அடைந்த பிறகு அந்தக் கட்சி பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அக்கட்சியின் பெரும்பாலான தலைவர்கள், எம்.பி.க்கள், எம... மேலும் பார்க்க

சேலம்: 4 பவுன் நகைக்காக 8 துண்டுகளாக பெண்ணை வெட்டி மூட்டையில் கட்டிய‌ கொடூரம்; அதிர்ச்சிப் பின்னணி

சேலம் மாவட்டம் அரிசிபாளையம் குணபாலன் ராமசாமி தெருவில் வசித்து வரும் கோயில் பூசாரி ரமேஷ் என்பவர், கடந்த ஆகஸ்ட் 31 அன்று தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். வீட்டின் ... மேலும் பார்க்க

"ரூ.1 லட்சம் முதலீட்டிக்கு ரூ.8000 மாத வட்டி"- ரூ.300 கோடியைச் சுருட்டிய மதுரை செண்பக பாண்டியன் கைது

சேலம் மாவட்டம் ரெட்டிபட்டியைச் சேர்ந்தவர்கள் விஜயராகவன்- ராகினி தம்பதி மற்றும் மதுரையைச் சேர்ந்த செண்பக பாண்டியன் ஆகிய மூவரும் சேர்ந்து பிராஃபிட் எவர் டிரேடர்ஸ் என்கிற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை 2024... மேலும் பார்க்க

டைம்ஸ் சதுக்கம்: பேங்க் ஆஃப் அமெரிக்கா பெண் அதிகாரி கொலை - நொடியில் முடிந்த இளம் தாயின் வாழ்கை

ஐந்து மாதக் குழந்தை, அன்புக் கணவன், பெருமைக்குரிய வங்கிப் பணி... மகிழ்ச்சியின் உச்சத்தில் மிதந்துகொண்டிருந்த ஒரு இளம் தாயின் வாழ்க்கை, ஒரு நொடியில் சிதைந்துபோன கொடூரம் அமெரிக்காவை அதிர்ச்சியில் உறைய வ... மேலும் பார்க்க

`காலனிக்காரனுங்க உட்கார்ந்ததால் நாற்காலியைக் கொளுத்திட்டேன்’ - முன்னாள் ஊராட்சித் தலைவரின் சாதிவெறி

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் ஒன்றியத்துக்குட்பட்ட கொசவன்புதூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் சந்திரபாபு, வயது 52. இவர் அந்த ஊராட்சியின் முன்னாள் மன்றத் தலைவராக இருந்தவர். தற்போது, இவரின் மனைவி புவனேஸ்வரி க... மேலும் பார்க்க