செய்திகள் :

பங்குச் சந்தையில் மாஸ் காட்டிய ஈரோடு நிறுவனம்... முதல் நாளே 30% அதிரடி ஏற்றம்!

post image

ஈரோட்டில் தயிர்பாளையம் கிராமத்தில் சிறிய அளவில் தொடங்கிய மில்கி மிஸ்ட் பயணம் இன்று இந்தியாவின் முன்னணி டெய்ரி நிறுவனமாக மாறும் அளவுக்கு வந்திருக்கிறது.

குடும்பத்தின் பால் வியாபாரம் தோல்வி அடைந்த நிலையில், குடும்ப சூழல் காரணமாக 16 வயதில் படிப்பை பாதியில் விட்டுவிட்டு பிசினஸை கையில் எடுத்த சதீஷ்குமார், பால் விற்பனையில் அல்லாமல் பால் மதிப்பு கூட்டு பொருள்களில் மட்டும் தன் தீவிர கவனத்தைச் செலுத்தினார். அவருடைய மாற்று சிந்தனையின் பலனாக மில்கி மிஸ்ட் நிறுவனம் மாபெரும் வளர்ச்சியைக் கண்டது.

10 கிலோ பனீர் தயாரிப்பில் தொடங்கிய பிசினஸ் இன்று பங்குச் சந்தை வரை வந்திருக்கிறது. சமீபத்தில் பொதுப் பங்கு வெளியீடு மூலம் ரூ.1,553 கோடி அளவுக்கு நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியது மில்கி மிஸ்ட். அந்த பங்கு வெளீயீட்டில் பங்குகளை வாங்க அனைவரும் ஆர்வம் காட்டியதில் ஒரே நாளில் ஓவர்சப்ஸ்கிரைப் ஆனது.

மில்கிமிஸ்ட்

ஐபிஓ வெளியீட்டின் வெற்றியைத் தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 18) பங்குச் சந்தையில் பட்டியலாகி தனது வர்த்தகத்தைத் தொடங்கியது. பட்டியலாகும்போதே மில்கி மிஸ்ட் பங்கு, அதன் ஐபிஓ விலையான ரூ.140-ஐவிட 18% உயர்ந்து, ரூ.165-ல் பட்டியலானது. அதன் பிறகும் முதலீட்டாளர்கள் பலர் இதன் பங்கு வர்த்தகத்தில் காட்டிய ஆர்வமும் வரவேற்பும் பங்கு விலையை சுமார் 30% வரை உயர்த்தியது. இதனால் மில்கிமிஸ்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.14,000 கோடியை எட்டியுள்ளது.

நலிவடைந்த குடும்ப பால் வியாபாரம், பள்ளிப் படிப்பைத் தொடர முடியாத 16 வயது சிறுவனுடைய உழைப்பும் விடாமுயற்சியினாலும் இவ்வளவு பெரிய வளர்ச்சியைக் கண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் இன்று பங்குச்சந்தையிலும் பட்டியலாகி, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பைத் தொட்டிருக்கிறது.

பனீர், சீஸ், நெய் போன்றவற்றில் தென்னிந்தியாவில் முன்னணி பிராண்டாக இருக்கும் மில்கி மிஸ்ட் நிறுவனத்தை விரைவில் இந்தியாவின் முன்னணி டெய்ரி பிராண்டாக மாற்றும் முயற்சிகளைத் திட்டமிடுவதாக நிறுவனமும் அதன் தலைவர் சதீஷ்குமாரும் தெரிவித்துள்ளனர்.!

`ஐ.டி வேலை புரொஃபஷன்... பேக்கிங் என்னுடைய பாஷன்!' - பிரௌனி விற்பனையில் கவனம் ஈர்க்கும் சேலம் இளைஞர்

“நன்றே செய், அதை இன்றே செய். நமக்குப் பிடித்த ஒரு விஷயத்தைச் செய்ய சரியான நேரத்துக்காகக் காத்திருக்கக் கூடாது. சின்னதாக இருந்தாலும் பரவாயில்லை... நல்ல விஷயத்தை இன்றே தொடங்கிடணும்!”பகலில் லேப்டாப் முன்... மேலும் பார்க்க

MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதராக சமந்தா ரூத் பிரபு நியமனம்!

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு தரமான மற்றும் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்ட குடியிருப்புகளை உருவாக்கி வரும் MP Developers, தனது அடுத்தகட்ட வளர்ச்சிப் பயணத்தின் முக்கியமான அடையாளமாக, பிரபல நடிகை ... மேலும் பார்க்க

நோயல் டாடா உடன் விரிசல்; 'முன்னெச்சரிக்கை'யாக போட்டியிலிருந்து விலகிய N.சந்திரசேகரனின் சாதனைகள்!

ஒன்பது ஆண்டுகள்... இரண்டு பதவிக்காலத்தை டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக கழித்துள்ள என்.சந்திரசேகரன் அடுத்த தலைவர் பதவிக்கால போட்டியில் கலந்துகொள்ளப் போவதில்லை. இது தான் இந்திய பிசினஸ் உலகத்தின் தற்போத... மேலும் பார்க்க

Tata Sons-ன் அடுத்த தலைவர் 'இவரா?' - அடிபடும் பேச்சுகள்; தலைவர் எப்படி தேர்வு செய்யப்படுவார்?

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவி காலியாகிறது. மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டிப்போட போவதில்லை என்று டாடா சன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் என்.சந்திரசேகரன் அறிவித்த... மேலும் பார்க்க

`நான் ஏன் Tata Sons தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்?' - N சந்திரசேகரன் முழு விளக்கம்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவதிலிருந்து விலகுகிறார் N.சந்திரசேகரன். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், 2017-ம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர... மேலும் பார்க்க