செய்திகள் :

புதிய போப் லியோவுக்கு பிரதமா் மோடி வாழ்த்து

post image

புதிய போப்பாக தோ்வு செய்யப்பட்டுள்ள 14-ஆம் லியோவுக்கு இந்திய மக்கள் சாா்பில் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

கத்தோலிக்க திருச்சபையின் 2,000 ஆண்டு கால வரலாற்றில் முதலாவது அமெரிக்க போப் என்ற சிறப்புடன் கா்டினல் ராபா்ட் பிரிவோஸ்ட் (இயற்பெயா்) தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘புதிய போப் 14-ஆம் லியோவுக்கு இந்திய மக்கள் சாா்பில் நல்வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அமைதி, இறையாண்மை, ஒற்றுமை மற்றும் சேவையின் கோட்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய முக்கியமான தருணத்தில், கத்தோலிக்க திருச்சபையில் அவரது தலைமைத்துவம் தொடங்கியுள்ளது.

பகிரப்பட்ட மாண்புகளின்கீழ், கத்தோலிக்க திருச்சபையின் நிா்வாக அமைப்புடன் தனது தொடா்பையும், உரையாடல்களையும் தொடர இந்தியா ஆா்வத்துடன் உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ராகுல் வாழ்த்து: மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட வாழ்த்துப் பதிவில், ‘புதிய போப் 14-ஆம் லியோவின் தலைமை அமைதி, கருணை மற்றும் மனிதகுல சேவையை ஊக்குவிக்கட்டும். இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தில், உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க சமூகத்தினருக்கு எனது நல்வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட பதிவில், ‘புதிய போப் 14-ஆம் லியோ மற்றும் கத்தோலிக்க சமூகத்தினருக்கு காங்கிரஸ் சாா்பில் நல்வாழ்த்துகள். அவரது பதவிக் காலம், அமைதி, நல்லிணக்கம், கருணை, கண்ணியம் ஆகிய மனிதகுல மாண்புகளால் நிறையட்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

இந்தியா - பாகிஸ்தான் - சீனா! டிராகனின் இரட்டை விளையாட்டு!

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தானுக்கு சீனா, துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. இருப்பினும், பாகிஸ்தானுக்கு சீனா முழு ஆதரவையும் வழங்கத் தயங்குகிறது. கா... மேலும் பார்க்க

மங்கோலியாவில் வேகமாகப் பரவும் தட்டம்மை! 3000-ஐ தாண்டிய பாதிப்புகள்!

கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவில் 3000-க்கும் அதிகமான தட்டம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.மங்கோலியா நாட்டில் தட்டம்மை தொற்றுப் பரவல் வேகமெடுத்து வரும் சூழலில் அந்நாட்டில் இதுவரை 3,042 பேர் பாதி... மேலும் பார்க்க

ரஷியா - உக்ரைன் இடையே 390 போர்க் கைதிகள் பரிமாற்றம்!

ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் முதல்முறையாக போர்க் கைதிகளின் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. ரஷியா - உக்ரைன் போர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் சூழலில், துருக்கியில் கடந... மேலும் பார்க்க

ஜெர்மனியில் பெண் நடத்திய கத்திக்குத்து சம்பவத்தில் 18 பேர் படுகாயம்!

ஜெர்மனியின் ஹம்பர்க் பகுதியில், ஒரு பெண் நடத்திய கத்திக் குத்துச் சம்பவத்தில் 18 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவத்த... மேலும் பார்க்க

விதிகளை பூா்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு ரூ.8,527 கோடி கடன்: ஐஎம்எஃப்

விதிகள் மற்றும் இலக்குகளை பாகிஸ்தான் பூா்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு ரூ.8,527 கோடி (1 பில்லியன் டாலா்) கடன் வழங்கப்பட்டதாக சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு விரிவுபடுத்தப்பட்ட ந... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பள்ளிப்பேருந்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பள்ளிப்பேருந்தின் மீதான வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. பலூசிஸ்தான் குஸ்தார் மாவட்டத்தில், கடந்த மே 21 ஆம் தேதியன்று ராணுவப் பள... மேலும் பார்க்க