செய்திகள் :

மழைக்காலத்தில் கழிவுநீர் சூழும் அபாயம் - மதுரை கோரிப்பாளையத்தில் வலுக்கும் மக்கள் போராட்டம்!

post image

கோயில் மாநகராமான மதுரையின் மத்தியப் பகுதி, கோரிப்பாளையம் - செல்லூர் பகுதியில் "செல்லூர் கண்மாயின்" வடிகால் தூர்வாரும் பணிகள் கடந்த மூன்று மாதமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வடிகால் பணி காரணமாக கால்வாயின் இருபக்கமும் இருக்கின்ற கழிவுநீர்க் குழாயை அடைத்திருக்கிறார்கள். இதனால் கழிவுநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பாதாளச் சாக்கடை பல வாரங்களாக சாலைகளிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் புகுந்து தொற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்பிரச்னையை மதுரை மாநகராட்சிக்குப் புகாராகக் கொடுத்தும் துறை சார்ந்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதிவாழ் மக்கள் குறைப்படுகின்றனர்.

அன்றாடம் பள்ளி செல்லும் குழந்தைகள், பச்சிளம் பிள்ளைகள் என கொசுக்கடியில் அவதிப்படுவதோடு, குடிநீரோடு கழிவுநீர் கலந்து வருவதைக் கண்டித்தும், அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதையும் கோரிக்கையாக வைத்து கண்மாயின் வடிகால் பணியை துரிதமாய் முடிக்கக் கோரியும் பந்தல்குடி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிறிது மழை பெய்தால்கூட, கால்வாய்க்கு அருகிலுள்ள பந்தல்குடி, கான்சாபுரம், அப்துல் ரஹ்மான், ஜஹாங்கீர் கான், ஜம்புரோபுரம் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளிலுள்ள வீடுகளில் கழிவுநீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இச்சாலை மறியல் காரணமாக மதுரை சிம்மக்கல் பகுதி தொடங்கி யானைக்கல், வைகை மேம்பாலம், செல்லூர் கோரிப்பாளையம் இணைப்புச் சாலை என வழிநெடுகிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து தடைபட்டது.

காவல்துறையின் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மறியலில் ஈடுபட்டோர் சாலையோரம் கூடி, போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் கைது: ``விசாரணை நடத்துவதுதான் நோக்கம் என்றால்..." - ஸ்டாலின் கேள்வி

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``காவிரி உரிமையை நிலைநாட்ட துப்பு இல்லாத, த.வெ.க. அரசின் அலட்சிய ஆணவப் போக்கை... மேலும் பார்க்க

"அமைச்சர் வன்னிஅரசு சொல்வது வேறு... நான் எழுப்புகிற கேள்விகள் வேறு!" - விளக்குகிறார் ஆளூர் ஷாநவாஸ்

த.வெ.க அரசின் மூன்று மாதகால ஆட்சி குறித்து பல்வேறு அதிரடி விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ். இந்தச் சூழலில், நமது சந்தேகங்களை கேள்விகள... மேலும் பார்க்க

உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரம்: `விடுவிக்க உத்தரவிட்ட நீதிமன்றம்' - என்ன நடந்தது?

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நீதிமன்றம், ``நாளை சட்டமன்றம் கூட உள்ள நிலையில், இன்றே வ... மேலும் பார்க்க

உதயநிதி கைது: ``நாங்க என்ன தீவிரவாதிகளா... இப்படி அடிச்சிருக்கீங்க?" - மேயர் பிரியா

எதிர்க்கட்சித் தலைவர் கைதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திமுக தொண்டர்கள் சாலை மறியல், அரசுக்கு எதிரான போராட்டம் போன்றவைகளில் ஈடுபட்டனர். அதைக் கலைக்கும் வகையில் சில இடங்களில் தடியடி நடத்... மேலும் பார்க்க

உதயநிதி : ``இரட்டை பொருள் தரும் வகையில் பேசுவதை தவிர்த்திருக்க வேண்டும்" - திருமாவளவன்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையில் ஒரு பகுதி சர்ச்சையானது. அது தொடர்பாக ஆளும் தவெக அரசு உதயநிதி ஸ்டாலினை கைது செய்திருக்கிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அவசர வழக்காக வி... மேலும் பார்க்க

எப்போது தான் நிற்கும் பெண்கள் குறித்த இந்த அருவருக்கத்தக்க பேச்சுகள்?!

உதயநிதி ஸ்டாலின் - தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவர், தமிழ்நாட்டின் முன்னாள் துணை முதலமைச்சர், நயினார் நாகேந்திரன் - தமிழ்நாட்டின் பாஜக மாநிலத் தலைவர், சி.வி.சண்முகம் - தமிழ்நாட்டின் முன்னாள் சட்டத்து... மேலும் பார்க்க