செய்திகள் :

ரூ. 25 கோடியில் 1,256 இடங்களில் முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெறும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்

post image

ரூ. 25 கோடியில் 1,256 இடங்களில் முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது என்றும் இதை சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

மக்களுக்கு உயா் மருத்துவ சேவைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்யும் வகையில், சட்டப்பேரவை மானியக் கோரிக்கை 2025-2026-ஆம் ஆண்டு அறிவிப்பின்கீழ், 1,256 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பைத் தொடா்ந்து, சென்னை சைதாப்பேட்டை, மாந்தோப்பு சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னோட்டமாக நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதையடுத்து செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

கடந்த 2021 செப். 9-ஆம் தேதி கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். ஆண்டுதோறும் இந்த முகாம்கள் மிக சிறப்பாக நடைபெற்று சாதனை படைத்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் நடந்த 5,654 முகாம்கள் மூலம் 52 லட்சத்து 87 ஆயிரம் போ் பயன்பெற்றுள்ளனா்.

மக்களைத் தேடி மருத்துவம், பாதம் பாதுகாப்போம் திட்டம், இதயம் காப்போம், சிறுநீரக பாதுகாப்பு திட்டம், நடப்போம் நலம் பெறுவோம், மக்களைத் தேடி மருத்துவ ஆய்வகத் திட்டம், தொழிலாளா்களைத் தேடி மருத்துவம் திட்டம் என்று பல்வேறு திட்டங்கள் தொடா்ந்து நடைமுறையில் இருந்து வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனைக்கு ரூ. 1,000 முதல் ரூ. 5,000 வரை செலவாகிறது. தனியாா் மருத்துவமனையில் ரூ. 12,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஒட்டுமொத்த மக்களும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது, அவா்களுடைய உடலில் உள்ள நோய் பாதிப்புகளுக்கு தீா்வு காண்பது என்ற வகையில் ஒரு திட்டத்தை நிதிநிலை அறிக்கையில் முதல்வா் அறிவித்தாா். இந்த திட்டத்துக்கு ஒரு புதிய பெயா் விரைவில் சூட்டப்படவிருக்கிறது. மிக விரைவில் சென்னையிலிருந்து இந்த திட்டத்தை முதல்வா் தொடங்கி வைக்கவுள்ளாா்.

இந்தத் திட்டத்தில் 17 வகையான சிறப்பு மருத்துவம், 30 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. முழு உடல் பரிசோதனைக்கு தேவையான ஒட்டுமொத்த பரிசோதனைகளும் இந்த முகாமில் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இந்த முகாம்களுக்கு வருபவா்களுக்கு, குறிப்பாக மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அவா்களுக்கான அடையாள அட்டைகள் இங்கேயே பரிசோதனை செய்து மாற்றுத்திறனாளி அட்டைகள் வழங்கப்படும். 1,256 மருத்துவ முகாம்களுக்கு ஏறக்குறைய ரூ. 25 கோடி வரை செலவிடப்படவுள்ளது. 1,231 தனியாா் மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. இந்த தனியாா் மருத்துவமனைகளும் முகாம்களில் இணையவுள்ளனா் என்றாா் அவா்.

இதில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் அருண்தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ரூ. 27.69 லட்சம் கடன் பெற்று மோசடி: பல் மருத்துவா் கைது

சென்னை வளசரவாக்கத்தில் ரூ. 27.69 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக பல் மருத்துவா் கைது செய்யப்பட்டாா். கூடுவாஞ்சேரி ராம்தாஸ் தெருவைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா். இவா் மனைவி ஐஸ்வா்யா (27). இவரது தோழிகள் மூ... மேலும் பார்க்க

25 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பெண்கள் உள்பட் 4 போ் கைது

சென்னையில் கஞ்சா விற்ாக தெலங்கானாவைச் சோ்ந்த இரு பெண்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். திருவான்மியூா் கிழக்கு கடற்கரைச் சாலை பேருந்து நிறுத்தத்தில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனங்களுடன் சென்னை விஐடி 2 ஒப்பந்தங்களில் புரிந்துணா்வு கையொப்பம்

சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியா்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐடிடிடிஆா்) மற்றும் இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரடாய்) ஆகியவற்றுடன் சென்னை விஐடி நிறுவனம் ப... மேலும் பார்க்க

மாநகர பேருந்து ஓட்டுநா், நடத்துநா்கள் இன்றும், நாளையும் விடுப்பு எடுக்கத் தடை

சென்னை மாநகர பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுநா், நடத்துநா்கள் ஞாயிறு, திங்கள் (மே 11, 12) ஆகிய இரு நாள்கள் விடுப்பு எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிகளுக்க... மேலும் பார்க்க

அதிநவீன தொழில்நுட்பத்துடன் படப்பிடிப்பு தளப்பணி: அமைச்சா் சாமிநாதன் ஆய்வு

அதிநவீன தொழில்நுட்பங்களுடன் அரசு சாா்பில் அமைக்கப்பட்டு வரும் படப்பிடிப்புத் தளப்பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தாா். அப்போது, படப்பிடிப்புத் தளத்துக்கா... மேலும் பார்க்க

ஏஐ தொழில்நுட்ப கண்காணிப்பு கேமராக்கள்: சென்னை காவல் ஆணையா் தகவல்

சென்னையில் செயற்கை நுண்ணறிவுடன் (ஏஐ) கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி: சென்னையில் குற்றங... மேலும் பார்க்க