செய்திகள் :

"19-ம் நூற்றாண்டின் பிற்போக்குத்தனமான கருத்து" - முஸ்லிம் மதகுரு பேச்சுக்கு கேரள முதல்வர் எதிர்ப்பு

post image

தங்க நகைகள் பெட்டிக்குள் இருப்பதுபோன்று பெண்களும் வீட்டுக்குள் இருக்க வேண்டும், பெண்கள் பொதுவெளியில் நடந்தால் நாசம் ஏற்படும். பெண்கள் வீட்டில் அடங்கி ஒடுங்கி வாழ வேண்டும் என முஸ்லிம் மதகுருவும், சமஸ்த அமைப்பின் தலைவருமான கேரளத்தைச் சேர்ந்த காந்தபுரம் ஏ.பி.அபுபக்கர் முஸ்லியார் சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார்.

இது விவாதம் ஆனநிலையில் நேற்று அமைச்சரவை கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் வி.டி.சதீசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து முதல்வர் வி.டி.சதீசன் கூறுகையில், "பொது இடங்களில் பெண்கள் நடமாடுவது தொடர்பாக காந்தபுரம் ஏ.பி. அபுபக்கர் முஸ்லியார் கூறியுள்ள கருத்து, முற்போக்கு சிந்தனை கொண்ட கேரளாவுக்கு எந்த வகையிலும் பொருத்தமானதல்ல.

19-ம் நூற்றாண்டில் பேசப்பட வேண்டிய ஒரு பிற்போக்குத்தனமான கருத்தை அவர் இந்த 21-ம் நூற்றாண்டில் பேசிக் கொண்டிருக்கிறார். எங்கள் அரசுக்கோ, எங்கள் கட்சிக்கோ இந்த நிலைப்பாட்டில் துளியளவும் உடன்பாடில்லை.

அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். பெண்கள் பொதுவாழ்வின் அனைத்து தளங்களிலும் சம உரிமையோடு பங்கேற்று முன்னேற வேண்டும் என்பதே எங்கள் அரசின் உறுதியான நிலைப்பாடு.

காந்தபுரம் ஏ.பி.அபுபக்கர் முசலியார்
காந்தபுரம் ஏ.பி.அபுபக்கர் முசலியார்

இஸ்லாமிய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தாலே இது மிகத் தெளிவாகப் புரியும். நபிகள் நாயகத்தின் முதல் மனைவி கதீஜா ஒரு மாபெரும் வணிகராகத் திகழ்ந்தவர். அவரது மற்றொரு மனைவியான ஆயிஷா 'ஜமல்' போரில் படைகளை வழிநடத்திய தலைமைத் தளபதியாக நின்றவர்.

இஸ்லாமிய வரலாற்றில் போற்றப்படும் பில்கீஸ் நாடாண்ட ஒரு அரசி. நீதியாளரான கலீஃபா உமரின் அரசவையில் பெண்களுக்கு வழங்கப்படும் மஹர் தொகையைக் குறைக்க முடிவெடுத்தபோது, அதை நேருக்கு நேர் நின்று கேள்வி எழுப்பியது ஒரு பெண்தான்; கலீஃபா உமரும் அந்தப் பெண்ணின் நியாயத்தை ஏற்றுக்கொண்டு தன் முடிவை மாற்றிக்கொண்டார். அப்போதைய அரசவையிலேயே பெண்கள் அமர்ந்து உரிமை பேசினார்கள் என்பதையே இந்த வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

கேரள முதல்வர் வி.டி.சதீசன்
கேரள முதல்வர் வி.டி.சதீசன்

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸியை கேரளாவிற்கு அழைத்து வருவதாகக் கூறி நடத்தப்பட்ட மோசடி புகார் குறித்து விளையாட்டுத்துறை தீவிரமாக ஆய்வு செய்து விரிவான அறிக்கையைத் தயாரித்துள்ளது. அந்த அறிக்கை உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

இதன்மீது முறையான விசாரணை நடத்துவது குறித்து உள்துறை மிக விரைவில் முடிவெடுக்கும். பாலக்காடு ரயில்வே கோட்டப் பிரிப்பு விவகாரத்தில் கேரளாவின் கடுமையான எதிர்ப்பை மத்திய ரயில்வே அமைச்சரிடம் நாங்கள் முறைப்படி பதிவு செய்துள்ளோம்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமரையும் ரயில்வே அமைச்சரையும் நேரில் சந்தித்துப் பேசி மாநிலத்தின் உரிமையை நிலைநாட்டுவோம்" என்றார்.

Iran: "நீங்கள் தோண்டிய குழியில் இருந்து உங்களால் தப்ப முடியாது" - அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

அமெரிக்காவும், ஈரானும் மீண்டும் ‘தாக்குதல்’ மோடுக்குள் சென்றிருக்கின்றன.ஈரான் போரின் போக்கு ஈரான் போர் பிப்ரவரி மாதக் கடைசித் தேதியில் தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில் தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்... மேலும் பார்க்க

"ஹார்முஸ் நீர்ச்சந்தியின் பெயரை 'ட்ரம்ப் நீர்ச்சந்தி' என மாற்றிடலாமா?" - ட்ரம்ப் புது யோசனை

ஈரான் போர் ஈரான், அமெரிக்கா, இஸ்ரேலுக்கு இடையிலான போராகத்தான் முதலில் தொடங்கியது. ஆனால், இந்தப் போருக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக, ஈரான் ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடியபோதுதான், ஈரான் போர் உலக நாடுகளு... மேலும் பார்க்க

போனுக்கு டோக்கன்: 'கோவிலுக்குச் செல்வதையே யோசிக்க வைக்கும் இது' - அண்ணாமலை விமர்சனம்

நேற்று (செப்டம்பர் 1) முதல், தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலை கோயில்களுக்கு மொபைல் போன் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.பக்தர்கள் தங்களது மொபைல் போன்... மேலும் பார்க்க

"பெருவெள்ளத்திற்கு இந்தியா, சீனா, அமெரிக்கா காரணம்; இழப்பீடு வேண்டும்" - குற்றம்சாட்டும் நேபாள அரசு

கடந்த வாரம் (ஆகஸ்ட் 26), பனிப்பாறை சரிவினால் நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் மீட்புப் பணிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.இந்தப் பேரிடருக்குக் ... மேலும் பார்க்க

அரகஜா திலகம் `டு' ஜெயில் பரிகாரம்... முதல்வர் விஜய்யைச் சுற்றும் ஜோதிட சர்ச்சைகள்!

அரகஜா திலகம் :தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றபோது கோட் ஷூட் அணிந்தது எந்தளவுக்கு பேசுபொருளானதோ அதைவிட, அவர் நெற்றியில் வைத்திருந்த கருப்பு நிற பொட்டு பேசுபொருளானது. அந்த கருப்பு மை போன்ற திலகம் அரகஜ... மேலும் பார்க்க