செய்திகள் :

BRICS: மோடி -புதின் சந்திப்பு; புதினுக்கு 'திருக்குறள்' புத்தகம் Gift - என்ன பேசினார்கள்?

post image

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின்.

இன்று இந்தியப் பிரதமர் மோடி - புதின் சந்திப்பு தனிப்பட்ட முறையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பு குறித்து மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“பிஷ்கேக்கில் நாங்கள் இருவரும் சந்தித்திருந்தோம். அடுத்த இரண்டு வாரங்களுக்குள்ளே டெல்லியில் அதிபர் புதினை மீண்டும் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி.

இன்றைய சந்திப்பின் போது நாங்கள் கலந்தாலோசித்த முக்கியமான விஷயங்கள்:

புதின் - மோடி
புதின் - மோடி

> ‘பொருளாதாரக் கூட்டுறவுத் திட்டம் 2030’-ஐ செயல்படுத்துவது உட்பட, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவது,

> கட்டமைப்பு, ஆற்றல் (எனர்ஜி), தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவது,

> நமது பூமியின் நலனை மேம்படுத்தும் நோக்கில், இந்தியா வகிக்கும் பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் பேசினோம்”

- என்று மோடி தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

புதினுக்கு பரிசு

புதினுக்குத் திருக்குறள் புத்தகத்தைப் பரிசாக வழங்கியிருக்கிறார் மோடி. அது குறித்து, “ரஷ்ய அதிபர் புதினுக்குத் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்புப் பிரதியைப் பரிசளித்தேன்.

திருக்குறள் தேச எல்லைகள், மொழிகளைக் கடந்த திருவள்ளுவரின் அளப்பரிய ஞானத்தைப் பறைசாற்றுகிறது” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மோடி.

’வீட்டுக்கு அருகிலேயே தலைமைச் செயலகம் கட்டுவேன் என்ற பிடிவாதம் ஆபத்தில் முடியும்’–வானதி சீனிவாசன்!

பா.ஜ.க முன்னாள் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை, பட்டினப்பாக்கம், கடற்கரையையொட்டி, 25.55 ஏக்கரில், ரூ.1,200 கோடியில், தலைமைச் செயலகம், சட்டமன்றம் கட்டப்படும் ... மேலும் பார்க்க

"அப்போதே விஜய்யின் அரசியலை அம்பலப்படுத்தி இருந்தால் இப்படி நடந்திருக்குமா?"- திருமாவளவன் கூறுவதென்ன?

திருமண விழாவில் கலந்துகொண்ட விசிக தலைவர் திருமாவளவன் திமுகவின் தோல்வி குறித்து பேசியிருக்கிறார். "தவெகவை குறைத்து மதிப்பிட்டதற்கு திமுகவின் கணிக்க தவறிய அணுகுமுறைதான் காரணம். கணித்திருக்க வேண்டுமா? வே... மேலும் பார்க்க

’நாங்கள் செய்ததை அவர் செய்ததாக ஸ்டிக்கர் ஒட்டுகிறார்’– கனிமொழி எம்எல்ஏ மீது எஸ்டிபிஐ குற்றச்சாட்டு

கோவை துடியலூர் அருகேயுள்ள அசோகபுரம் என்.ஜி.ஜி.ஓ காலனி பகுதியில் கடந்த வாரம் நள்ளிரவில் போதையில் இருந்த இளைஞர் ஒருவர் தனியாக சாலையில் அமர்ந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த... மேலும் பார்க்க

சட்டமன்றம் 2026: ` நேரலை - ஒரு வகையில் இது அரசியல் கல்வி; ஆனால் மாண்பு.?' - கே.பாலபாரதி | களம் 1

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,`களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது’... மேலும் பார்க்க

பாளையங்கோட்டை: குப்பைக் கிடங்காக மாறி வரும் பிரதான சாலை... அலட்சியம் தவிர்ப்பார்களா அதிகாரிகள்?

தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என அழைக்கப்படும் பாளையங்கோட்டையில், சுமார் 2 கி.மீ பரப்பளவிற்குள் டஜனுக்கும் மேற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிகளும், கல்லூரிகளும் செறிந்து காணப்படுகின்றன.தூய யோவான் கல்லூ... மேலும் பார்க்க