செய்திகள் :

H-1B விசா புதிய கட்டுப்பாடு: "தொடர்ந்து பேசுவோம்" - இந்தியர்களுக்கு இந்திய அரசின் விளக்கம் என்ன?

post image

ஹெச்-1பி விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக வலைத்தளங்கள் சோதனையிடப்படும் என்பதுதான் ஹெச்-1பி விசாவிற்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசின் லேட்டஸ்ட் நெருக்கடி.

இதனால், இந்தியாவில் டிசம்பர் 15-ம் தேதி முதல் முடிவாகியிருந்த ஆயிரக்கணக்கான ஹெச்-1பி விசா நேர்காணல்கள் தள்ளிப் போடப்பட்டிருக்கின்றன.

இதுகுறித்து நேற்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "ஹெச்-1பி விசா பிரச்னை குறித்து அமெரிக்காவிடம் பேசியுள்ளோம்.

இந்தியர்களுக்கு இதில் ஏற்பட்டுள்ள பிரச்னையைச் சரிசெய்ய தொடர்ந்து அமெரிக்கா உடன் பேசுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

ரந்தீர் ஜெய்ஸ்வால்
ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஏன் இது முக்கியம்?

இந்திய அரசு ஹெச்-1பி விசா பிரச்னையில் தலையிட்டு முடிவெடுப்பது மிக மிக முக்கியம்.

அமெரிக்காவின் ஹெச்-1பி விசா பெறும் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்தியர்களே.

சமூக வலைத்தளச் சோதனை காரணத்தால் மே மாதம் வரையில் நேர்காணல்கள் தள்ளிப் போயிருக்கின்றன.

அதுவரை இவர்களுக்கு வேலை இருக்காது; நிதி நெருக்கடி ஏற்படும். இவர்களின் குடும்பம் பாதிக்கப்படும்.

மே மாதம் வரையில் நேர்காணல் தள்ளிப்போனால், குடும்பத்துடன் அமெரிக்கா செல்லத் திட்டம் வைத்திருப்பவர்கள் பெரிய பிரச்னையைச் சந்திக்க நேரிடும்.

காரணம், மே மாதம் நேர்காணல் முடித்து அமெரிக்கா செல்லும்போது, குழந்தைகளுக்குப் பள்ளி, கல்லூரியில் அட்மிஷன் கிடைப்பது சிரமம்.

இதைச் சுற்றி இப்படி பல பிரச்னைகள் இருக்கின்றன. ஆக, இதில் இந்திய அரசு இன்னும் முனைப்பு காட்ட வேண்டும்.

"BJPவுடன் இருந்தபோதுதான் எந்தக் கல்லூரியில் ராமர் Engineering படித்தார் எனக் கலைஞர் கேட்டார்"-திருமா

"பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்திருந்த போது மதவாத அரசியலைப் பேசக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை பா.ஜ.க-விற்கு விதித்துதான் கலைஞர் கூட்டணி வைத்தார். பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருந்த போதுதான் ராமர் எந்தக் கல்லூ... மேலும் பார்க்க

'வெட்கமா இல்லையா திமுக அரசே?' - கொந்தளிக்கும் தூய்மைப் பணியாளர்கள்; குண்டுக்கட்டாக கைது!

தனியார்மயத்தை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னையில் 140 நாட்களுக்கு மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் அருகே கூடி கோட்டையை நோக்கி பேரணி ச... மேலும் பார்க்க

வெளிநாடுகளில் இருந்து அதிகம் வெளியேற்றப்படும் இந்தியர்கள்; இந்த '5' தான் காரணம் - மத்திய அமைச்சர்

இந்த ஆண்டு மட்டும் 81 நாடுகளில் இருந்து 26,400 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இது மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை சொன்ன தகவல்.இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவில் இருந்து அமெரிக்க அ... மேலும் பார்க்க

DMK vs TVK: ’திமுக தவெக இடையேதான் போட்டி!’ –விஜய்யின் தப்புக் கணக்கா திமுகவின் பயமா?

'2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியானது திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையில்தான்'- ஆரம்பத்தில் அவ்வளவு உரக்கச் சொல்லாத இந்த வார்த்தைகளை தற்போது சத்தமாகவே சொல்லத் தொடங்கியிருக்கிறார், தவெக தலைவர் விஜய்.ஒரு... மேலும் பார்க்க

கேரளா: "பாஜக மேயரை பினராயி விஜயன் போனில் அழைத்து வாழ்த்தினாரா?" - முதல்வர் அலுவலகம் சொல்வது என்ன?

கேரள மாநிலத்தில் கடந்த 9 மற்றும் 11-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.கடந்த 13-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 101 வார்டுகளில் தே... மேலும் பார்க்க

"அதிமுக –பாஜக கூட்டணியின் வாக்குகள் 61% அதிகரிக்கும்!" - சொல்வது ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில் மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "ஜெயலலிதா பேரவை சார்பில் திண்ணை பிரசாரம் தமிழகம் முழுதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத... மேலும் பார்க்க