செய்திகள் :

Operation Economic Outcast: 'ஈரானுக்கு இரண்டே வழிகள்தாம்' - அமெரிக்கா கொடுக்கும் சாய்ஸ்கள் என்னென்ன?

post image

ஈரான் போர் தொடங்கிக் கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்டன.

ராணுவத்தின் மூலம் ஈரானை அமெரிக்காவால் வழிக்குக் கொண்டுவர முடியவில்லை. இதனால், பொருளாதாரத் தடை அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளது அமெரிக்கா.

கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 19), அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘பொருளாதார D-Day’-ஐ அறிவித்தார்.

இதன்படி, ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு அமெரிக்காவின் தடைகள் பாயும்.

இந்தத் தடைகள் குறித்து நேற்று அமெரிக்காவின் நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் விளக்கியுள்ளார்.

ட்ரம்பின் அரசாங்கம் இந்தத் தடைக்கு வைத்துள்ள பெயர் – ‘ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்’ (Operation Economic Outcast).

இந்தத் தடைகள் குறித்து ஸ்காட் பெசென்ட்டின் வார்த்தைகளில் காணலாம்...

ஸ்காட் பெசன்ட்
ஸ்காட் பெசன்ட்

ஏன் இந்த நடவடிக்கை?

ஈரானிய இஸ்லாமியக் குடியரசைத் தாங்கிப் பிடிக்கும் எஞ்சியிருக்கும் அனைத்துப் பொருளாதார வாழ்வாதாரங்களையும் முற்றிலும் துண்டிப்பதற்கான முன்னெப்போதும் இல்லாத ஒரு நடவடிக்கை இது.

அதிபர் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க ராணுவத்தின் பிரமாண்ட ஆற்றல் மூலம் ஈரானின் ராணுவத் திறன்களும் அணுசக்தித் திட்டங்களும் முடக்கப்பட்டுவிட்டன.

எதிரி நாட்டிற்கு எதிராக இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய நிதித் தாக்குதலைத் தொடுத்து, அமெரிக்கா தனது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

ஈரானுக்கு இரண்டே வழிகள்தாம்!

ஈரான் இப்போது மிகத் தெளிவான ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அவர்களுக்கு முன்னால் இரண்டே வழிகள்தான் உள்ளன.

ஒன்று, முற்றிலும் உலகளாவிய தனிமைப்படுத்தல் மற்றும் பிழைப்புக்கான பொருளாதாரம் அல்லது உலகப் பொருளாதாரத்துடன் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புடன் இயல்பு நிலைக்குத் திரும்பும் வழி.

ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்
ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்

என்னென்ன நடவடிக்கை பாயும்?

அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக ‘ஜீரோ-லீக்கேஜ்’ அணுகுமுறையை அமல்படுத்துகிறோம்...

> ஈரான் பிற நாடுகளில் பயன்படுத்தும் ஐந்து முக்கிய வாழ்வாதாரங்களான – டிஜிட்டல் சொத்துக்கள், தொழில்நுட்பம், தங்கம், விமானப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றைக் குறிவைக்கிறோம்.

ஈரான் ஆட்சியுடன் தொடர்ந்து தொழில் செய்யும் முட்டாள்தனத்தில் ஈடுபடும் எவருக்கும் இரண்டாம் நிலைத் தடைகளின் ஆபத்தை இந்த நடவடிக்கைகள் அதிகரிக்கும்.

> ஈரான் சார்பில் பணமோசடிக்குத் (money laundering) துணைபுரியும் எந்தவொரு அமைப்பும் அமெரிக்க டாலர் அமைப்பிலிருந்து அகற்றப்படும்.

> ஈரான் ஆட்சியுடன் தொடர்பில் இருக்கும் நாடுகள் எங்கள் எச்சரிக்கையை உடனே கவனிப்பது நல்லது. அமெரிக்காவுடன் நிற்பவர்கள் எங்கள் கூட்டணியின் நன்மைகளை அறுவடை செய்வார்கள்.

ஈரானிய ஆட்சியுடன் கைகோர்ப்பவர்கள், சாய்ந்துகொண்டிருக்கும் ஒரு ஆட்சியுடன் சேர்ந்து தனிமைப்படுத்தப்பட வேண்டியிருக்கும்.

'வாகனத்தில் செய்யும் ஒவ்வொரு உருமாற்றத்திற்கும் தனித்தனியாக அபராதம்' - கேரள ஐகோர்ட் சொல்வது என்ன?

கேரள மாநிலத்தில் ​மீட்புப் பணிக்காகச் சென்ற ஜீப் ஒன்றில் பல இடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அந்த வாகன ஓட்டுநருக்கு ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்பட்டிருந்தது. அதற்கு கேரள உயர் நீதிமன்றம் கடும் அ... மேலும் பார்க்க

``சினிமாவில் ஹீரோ; அரசியலில் வில்லன் ஆக்ட்..!" - முதல்வர் விஜய்யை விமர்சிக்கும் டி.டி.வி.தினகரன்

அமமுக-வின் தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் தெற்கு ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தியின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, ``பர... மேலும் பார்க்க

புதுச்சேரி பட்ஜெட்: `21 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப பொருளாதார மண்டலம்!’ - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலையில் தொடங்கியது. காலை 9.30 மணிக்கு கவர்னர் கைலாஷ்நாதன் உரையாற்றி கூட்டத்தொடரை தொடங்கி வைத்தார். மாலை 3 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்... மேலும் பார்க்க

திருவல்லிக்கேணி: ஒரு பகுதி… பல நினைவுச்சுவடுகள் - மெட்ராஸின் வரலாற்றைத் தாங்கும் மண்!

`திருவல்லிக்கேணி' விவேகானந்தர் முதல் பாரதியார் வரை... கண்ணகி முதல் உ.வே.சா வரை... கல்வெட்டுகள் முதல் சாதிப் பிரிவினைகள் வரை... மெட்ராஸின் கல்வி, மருத்துவம், இலக்கியம், அரசியல், வர்த்தக வளர்ச்சிக்கு சா... மேலும் பார்க்க

குடியுரிமை: ``3 நாடுகளுக்கு தூதுராக இருந்தேன்; எனக்கே இந்த நிலை..." - நவதீப் சிங் சூரி சொல்வதென்ன?

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான இந்தியத் தூதராகவும், ஆஸ்திரேலியாவுக்கான உயர் ஆணையராகவும் பணியாற்றியவர், நவதீப் சிங் சூரி. இவர் பஞ்சாபில் நடைபெற்ற இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப... மேலும் பார்க்க

"பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை..!"- உதயநிதி கண்டனம்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட்.24) சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார்.இதற்கு திமுக எதிர்ப்பு வருகிறது. இந்நிலையில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக எதிர்... மேலும் பார்க்க