செய்திகள் :

குடியுரிமை: ``3 நாடுகளுக்கு தூதுராக இருந்தேன்; எனக்கே இந்த நிலை..." - நவதீப் சிங் சூரி சொல்வதென்ன?

post image

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான இந்தியத் தூதராகவும், ஆஸ்திரேலியாவுக்கான உயர் ஆணையராகவும் பணியாற்றியவர், நவதீப் சிங் சூரி. இவர் பஞ்சாபில் நடைபெற்ற இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிரத் திருத்த நடைமுறையின் (SIR) போது, தான் எதிர்கொண்ட அனுபவம் குறித்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``பஞ்சாபில் நடைபெற்ற சிறப்பு தீவிரத் திருத்த நடைமுறையின் போது வாக்குச்சாவடி நிலை அலுவலரைச் (BLO) சந்தித்து எனது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையைச் சமர்ப்பித்தேன். அனைத்து விவரங்களும் சரியாக இருப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால், 2003-ம் ஆண்டின் விவரங்களுடன் சில தகவல்கள் ஒத்துப்போகவில்லை என்று ஒரு அலுவலரிடமிருந்து எனக்கு செய்தி வந்தது.

நவதீப் சிங் சூரி
நவதீப் சிங் சூரி

மேலும், வாக்காளர் அலுவலர் என்னை நேரில் வந்து ஒரு அறிவிப்பைப் பெற்றுக்கொண்டு, இந்தியக் குடியுரிமையை நிரூபிப்பதற்கான சில ஆவணங்களுடன் வருமாறு கேட்டுக் கொண்டார். 2003-ம் ஆண்டில் நான் இந்தியாவில் இருக்கவில்லை என்று பதிலளித்தேன். அதன்பின்னர், சான்றாக எனது பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டனர். வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையைத் தவிர வேறு சில ஆவணங்கள் என்னிடம் உள்ளன. ஆனால், மூன்று நாடுகளுக்கு இந்தியத் தூதராகப் பணியாற்றிய பிறகும், எனது குடியுரிமையை நிரூபிப்பதில் எனக்குச் சிரமம் ஏற்படுகிறது என்றால், சாதாரணக் குடிமக்களின் நிலை என்ன? இதுதானா வாழ்க்கையை எளிதாக்கும் நடைமுறை?" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

"பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை..!"- உதயநிதி கண்டனம்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட்.24) சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார்.இதற்கு திமுக எதிர்ப்பு வருகிறது. இந்நிலையில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக எதிர்... மேலும் பார்க்க

``நான் லஞ்சம் கொடுத்ததற்கு நானே சாட்சி" - மரிய வில்சன் பேச்சுக்கு அன்பில் மகேஷ் ரியாக்ஷன் என்ன?

இன்று காலை நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றிய நிதி அமைச்சர் மரிய வில்சன், ``நான் பள்ளி நடத்துகிறேன். என்னுடைய பள்ளியை நடத்துவதற்கு என்னிடம் லஞ்சம் வாங்கினார்கள். எங்கே வாங்கினார்கள்? எவ்வளவு வ... மேலும் பார்க்க

'LED ஸ்க்ரீன், வாட்டர் பாட்டில், ஒரு நாள் அரசு டாக்டர்'- அவையில் எம்.எல்.ஏக்களின் வினோத கோரிக்கைகள்!

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் மக்கள் பிரச்னைகளை கடந்து சட்டமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த ஜாலியான வேடிக்கையான கோரிக்கைகள் இங்கே.கல்லாணைமுதல்வரை பார்க்க ... மேலும் பார்க்க

"பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும்"- ஸ்டாலின்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட்.24) சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது ... மேலும் பார்க்க

பரந்தூர்: ``தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்காக..." - முதல்வர் விஜய்யைச் சாடும் நயினார் நாகேந்திரன்!

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட்.24) சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இது குறித்து பேச திமுக அனுமதி கேட்டது. திட்டம் ரத்து செய்யப்பட்டதால் பேச எதுவும் ... மேலும் பார்க்க

'வருங்கால பிரதமர் விஜய்!' கலக குரல் எழுப்பும் அமைச்சர்கள் - காங்கிரஸை சீண்டுகிறதா த.வெ.க?

தவெக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில், `முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர்' என தவெகவினர் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் சரத்குமார், 'விஜய்தான் அடுத்த ... மேலும் பார்க்க