செய்திகள் :

சென்னை: காதல் விவகாரம்; இளைஞர் கொலை - த.வெ.க ஆதரவாளர், அவரின் குடும்பத்தினர் கைது!

post image

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே உள்ள தையூர் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரின் மகன் பிரவீன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த த.வெ.க ஆதரவாளர் ஏழுமலை என்பவரின் மகளை சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் காதலுக்கு எழுமலை குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 16 - ம் தேதி பிரவீனிடம் ஏழுமலையின் உறவினரான மணிகண்டன் என்பவர் தகராறு செய்தார். அப்போது தன்னுடைய உறவினர் மகளை காதலிப்பதை விட்டுவிடும்படி மணிகண்டன் மிரட்டியதாகத் தெரிகிறது. ஆனால் பிரவீன், காதலைக் கைவிட முடியாது என்று கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து பிரவீன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார். அதன் பிறகு மணிகண்டன், தன்னுடைய உறவினர் ஏழுமலைக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் போன் மூலம் விவரத்தைக் கூறியிருக்கிறார்.

த.வெ.க ஆதரவாளர் ஏழுமலை

இதையடுத்து சம்பவ இடத்துக்கு ஒரு கும்பல் வந்தது. அந்தக் கும்பல், கண் இமைக்கும் நேரத்தில் பிரவீனை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றது. பிரவீனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக பிரவீன், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரவீன் உயிரிழந்தார். இது தொடர்பாக பிரவீன் அம்மா பிரபாவதி கொடுத்த புகாரின் அடிப்படையில் கேளம்பாக்கம் போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தமிழன்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிரவீன் அளித்த தகவல், சி.சி.டி.வி கேமரா பதிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தனிப்படை போலீஸார், த.வெ.க ஆதரவாளர் ஏழுமலை, அவரின் மகன் கெளதம், ஏழுமலையின் உறவினர் மணிகண்டன், கௌதமின் நண்பர் நந்தீஸ் ஆகிய நான்கு பேரை கைதுசெய்தனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு பிரவீனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பிரவீனின் கொலைக்கு நீதிகேட்டு அவரின் குடும்பத்தினர் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

கெளதம்

இது குறித்து கேளம்பாக்கம் போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட பிரவீன், காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இது ஆணவக் கொலை அல்ல. தவறான தகவல்கள் பரபரப்படுகின்றன. சம்பவத்தன்று பிரவீனை ஏழுமலையின் குடும்பத்தினர் மிரட்டியிருக்கிறார்கள். அப்போது நடந்த தகராறில்தான் இந்தக் கொலை நடந்திருக்கிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்'' என்றனர்.

மகளின் காதல் விவகாரத்தில் த.வெ.க ஆதரவாளர் ஏழுமலை குடும்பத்தினர் கொலை வழக்கில் சிக்கியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை: பேஸ்புக் லிங்க்கை கிளிக் செய்ததால் பறிபோன ரூ.50 லட்சம்; முன்னாள் வங்கி அதிகாரியிடமே மோசடி

மும்பை புறநகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்வரி(70) என்ற பெண் மும்பை கோரேகாவ் பகுதியில் வசித்து வருகிறார். இவர் பிரபல வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆவார். இவர் ஓய்வு பெற்றபோது கிடைத்த தொகையை வங்கிகளில்... மேலும் பார்க்க

அலறடித்த சத்தம்; கணவரைக் கொன்று குடலை வெளியில் எடுத்த பெண் - கண்டு அதிர்ந்து போன வீட்டின் உரிமையாளர்

ஹரியானா மாநிலம், குருஷேத்ராவில் வசித்தவர் ராஜேஷ். இவர் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர் மனைவி விமலா. இவர் பில்லி சூனியம் மற்றும் பேயோட்டுதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார். அவர்களுக... மேலும் பார்க்க

ஸ்நேப்சாட், வாட்ஸ்ஆப் மூலம் போதைப்பொருள் விற்பனை; பாலிவுட் நடிகரைக் கைதுசெய்த மும்பை போலீஸ்!

மும்பையில் சமூக ஊடகங்கள் மூலம் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் இது குறித்து விசாரிக்க ஆரம்பித்தனர். ஸ்னாப்சாட் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வ... மேலும் பார்க்க

கோவை : தொழிலதிபர் மாமனாரிடம் இருந்து 900 பவுன் நகைகளை திருடிய டாக்டர் மருமகன் – நடந்தது என்ன?

கோவை கணபதிமாநகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முக பாண்டியன். இவரது மகள் கௌசல்யாவை பெரிய நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு 2024ம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து வைத்த... மேலும் பார்க்க

`ஜிம்மில் வந்து பார்' - மைனர் வீராங்கனை பாலியல் வன்கொடுமை; துரோணாச்சாரியா விருது பெற்ற கோச் கைது

மும்பை விலே பார்லேயை சேர்ந்த கணேஷ் தேவருக்கர் என்பவர் ஜிம்னாஸ்டிக் விளையாட்டு பயிற்சியாளராக இருக்கிறார். இவர் அங்குள்ள உடற்பயிற்சி மையம் ஒன்றில் இளம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஜிம்னாஸ்டிக் பயி... மேலும் பார்க்க

ஜெயிலில் ஸ்கெட்ச்; இன்ஸ்டாகிராமில் பிளான்! புதுக்கோட்டையில் சிக்கிய 'அமாவாசை' திருட்டுக் கும்பல்!

கோழி திருடன், ஆடு திருடனுடன் சிறையில் கூட்டணி சேர்ந்து இன்ஸ்டாகிராமில் பிளான் போட்டு, பகலில் பைக்குகளையும், அமாவாசை இரவுகளில் கோயில் உண்டியல்களையுன் கொள்ளையடித்து வந்த 3 பேர் கொண்ட கும்பலை, கடியையும் ... மேலும் பார்க்க