செய்திகள் :

அலறடித்த சத்தம்; கணவரைக் கொன்று குடலை வெளியில் எடுத்த பெண் - கண்டு அதிர்ந்து போன வீட்டின் உரிமையாளர்

post image

ஹரியானா மாநிலம், குருஷேத்ராவில் வசித்தவர் ராஜேஷ். இவர் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர் மனைவி விமலா. இவர் பில்லி சூனியம் மற்றும் பேயோட்டுதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார். அவர்களுக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் ஆன பிறகும் குழந்தை இல்லை. உத்தரப்பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட அவர்கள், வாடகை வீட்டில் மாடியில் தங்கி இருந்தனர். அவர்கள் தங்கி இருந்த வீட்டில் இருந்து அதிக அளவில் சத்தம் வந்ததால், வீட்டு உரிமையாளர் ரிங்கு மாடிக்குச் சென்று என்னவென்று பார்த்தார். அங்கு ராஜேஷ் வயிற்றில் பலத்தக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

விமலா ராஜேஷ் உடலில் இருந்து வெளியே வந்த குடலை ஒரு பையில் போடுவதை வீட்டு உரிமையாளர் ரிங்கு பார்த்தார். வீட்டு உரிமையாளரைக் கண்டதும், விமலா பீதியடைந்து மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார்.

இதில் அவர் படுகாயம் அடைந்தார். வீட்டு உரிமையாளர் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து ராஜேஷ் மற்றும் விமலாவை மருத்துவமனையில் சேர்த்தனர். விமலா சிகிச்சை பெற்று வருகிறார். ராஜேஷ் இறந்து போனார். பிரேத பரிசோதனையில் ராஜேஷின் வயிறு கூர்மையான ஆயுதங்களால் சுமார் 35 சென்டிமீட்டர் வரை வெட்டப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதனால் அவரது குடல் வயிற்றிலிருந்து வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது. பிரேத பரிசோதனையில் அவரது கல்லீரலின் கணிசமான பகுதி மற்றும் வலது சிறுநீரகத்தை காணவில்லை என்பதும் தெரியவந்தது. காணாமல் போன உறுப்புகள் குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆரம்பக்கட்ட விசாரணையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

ஸ்நேப்சாட், வாட்ஸ்ஆப் மூலம் போதைப்பொருள் விற்பனை; பாலிவுட் நடிகரைக் கைதுசெய்த மும்பை போலீஸ்!

மும்பையில் சமூக ஊடகங்கள் மூலம் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் இது குறித்து விசாரிக்க ஆரம்பித்தனர். ஸ்னாப்சாட் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வ... மேலும் பார்க்க

கோவை : தொழிலதிபர் மாமனாரிடம் இருந்து 900 பவுன் நகைகளை திருடிய டாக்டர் மருமகன் – நடந்தது என்ன?

கோவை கணபதிமாநகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முக பாண்டியன். இவரது மகள் கௌசல்யாவை பெரிய நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு 2024ம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து வைத்த... மேலும் பார்க்க

`ஜிம்மில் வந்து பார்' - மைனர் வீராங்கனை பாலியல் வன்கொடுமை; துரோணாச்சாரியா விருது பெற்ற கோச் கைது

மும்பை விலே பார்லேயை சேர்ந்த கணேஷ் தேவருக்கர் என்பவர் ஜிம்னாஸ்டிக் விளையாட்டு பயிற்சியாளராக இருக்கிறார். இவர் அங்குள்ள உடற்பயிற்சி மையம் ஒன்றில் இளம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஜிம்னாஸ்டிக் பயி... மேலும் பார்க்க

ஜெயிலில் ஸ்கெட்ச்; இன்ஸ்டாகிராமில் பிளான்! புதுக்கோட்டையில் சிக்கிய 'அமாவாசை' திருட்டுக் கும்பல்!

கோழி திருடன், ஆடு திருடனுடன் சிறையில் கூட்டணி சேர்ந்து இன்ஸ்டாகிராமில் பிளான் போட்டு, பகலில் பைக்குகளையும், அமாவாசை இரவுகளில் கோயில் உண்டியல்களையுன் கொள்ளையடித்து வந்த 3 பேர் கொண்ட கும்பலை, கடியையும் ... மேலும் பார்க்க

தருமபுரி: கயிற்றால் இறுக்கி, கல்லைக் கட்டி குட்டையில் வீச்சு; மாமியாரைக் கொன்ற மருமகனோடு ஐவர் கைது

."மாமியாரை காரில் கடத்திச் சென்று, கயிறால் கழுத்தை இறுக்கி கொன்று குவாரி, குட்டையில் போட்டு வந்தவனின் செயலை நினைத்தாலே குலை நடுங்குகிறது" என்கிறார்கள் வெங்கடசமுத்திரம் மக்கள்.குட்டையில் மிதந்த உடல்க்ர... மேலும் பார்க்க

குமரி: மாணவிக்கு முத்தம் கொடுத்து வீடியோ எடுத்த மாணவன்; ஆசிரியர்கள் கண்டித்ததால் தற்கொலை செய்தாரா?

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரம் பகுதியைச் சேர்ந்த விக்டர் தாமஸ் - லென்ஸி தம்பதியின் மகன் கவின் ஜெனில் (16). இவர் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு... மேலும் பார்க்க