செய்திகள் :

குமரி: மாணவிக்கு முத்தம் கொடுத்து வீடியோ எடுத்த மாணவன்; ஆசிரியர்கள் கண்டித்ததால் தற்கொலை செய்தாரா?

post image

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரம் பகுதியைச் சேர்ந்த விக்டர் தாமஸ் - லென்ஸி தம்பதியின் மகன் கவின் ஜெனில் (16).

இவர் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். விக்டர் தாமஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் ரத்தினபுரம் வடக்குத் தெருவில் வசித்து வருகின்றனர்.

நேற்று அவர் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், கவின் ஜெனில் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். தந்தை வேலைக்குச் சென்ற சிறிது நேரத்தில் வீட்டின் முன்பக்கக் கதவை வெளிப்பக்கமாகப் பூட்டிய கவின் ஜெனில், தனது பாட்டியிடம் வெளியே சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

ஆனால் சிறிது நேரத்திலேயே வீட்டின் பின்பக்கக் கதவு வழியாக மீண்டும் வீட்டிற்குள் சென்ற கவின் ஜெனில், அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டின் உள்ளிருந்து கூச்சலிடும் சத்தம் வருவதைக் கேட்ட அவரது பாட்டி உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது கவின் ஜெனில் தூக்கில் தொங்கிய நிலையில் துடித்தபடி கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டதால், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மாணவர் கவின் ஜெனிலை மீட்டு பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கவின் ஜெனில் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மாணவர் கவின் ஜெனிலின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து அவரது தாயார் லென்ஸி பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்
மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்

மாணவரின் தாய் ​லென்ஸி அளித்த புகாரில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வகுப்பில் உடன் படித்த மாணவி ஒருவருடன் சிரித்துப் பேசியதற்காக ஆசிரியர்கள் தனது மகனைக் கண்டித்ததாகவும், அதனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாகவே மகன் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறியிருக்கிறார்.

அவரது புகாரின் அடிப்படையில் பூதப்பாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆசிரியர்கள் கண்டித்ததே மாணவரின் தற்கொலைக்குக் காரணம் என்று கூறி சக மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

மேலும், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மாணவரின் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்தனர். அத்துடன், மாணவர் தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திச் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

தற்கொலை செய்துகொண்ட மாணவன் கவின் ஜெனில்
தற்கொலை செய்துகொண்ட மாணவன் கவின் ஜெனில்

​அதே சமயம், மாணவர் கவின் ஜெனில் தன்னுடன் படிக்கும் மாணவி ஒருவருடன் கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றதாகவும், அப்போது பேருந்தில் வைத்து மாணவிக்கு முத்தம் கொடுப்பதை வீடியோ எடுத்து ஸ்டேட்டஸ் வைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர்கள் விசாரித்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாணவி மாற்றுச் சான்றிதழ் பெற்றுக்கொண்டு வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில்தான் மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதற்கிடையே மாணவர், மாணவியுடன் எடுத்துக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை: பெண்ணின் உடல் பாகங்களை பிரியாணி போல சமைத்த தம்பதி - பூட்டிய வீட்டுக்குள் பேரதிர்ச்சி!

சென்னை சென்ட்ரலிருந்து கடந்த 5-ம் தேதி டெல்லி நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஆக்ரா ரயில் நிலையத்துக்குச் சென்ற போது முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டியிலிருந்து தூர்நாற்றம் வீசுவதாக பயணிகள் ரயில்வே ப... மேலும் பார்க்க

ஐபோன் EMI: மலையில் இருந்து குதித்த மகன்; காப்பாற்ற முயன்ற தந்தை உயிரிழப்பு - விபரீத முடிவெடுத்த தாய்

இன்றைய இளைய தலைமுறையிடம் மொபைல் போன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. போன் வாங்கிக்கொடுக்கவில்லையெனில் பிள்ளைகள் மிகவும் ஆக்ரோஷமாகிவிடும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில... மேலும் பார்க்க

ஒரே பெண்ணுக்கு இருவர் போட்டி: நடுத்தெருவில் மோதிக்கொண்டதில் ஜாமீனில் வந்த ரெளடி குத்திக்கொலை

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த கௌரவ் பங்கஜ் ரக்டே என்ற ரெளடியை கௌரவ் ரம்பாவ் ராவுட் என்ற ரவுடி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நடுரோட்டில் குத்திக்கொலை செய்துள்ளார். நாக்பூரின் மிகவும் பரபரப்பான 'க... மேலும் பார்க்க

துப்பாக்கிச்சூடு விவகாரம்: ஸ்டிக்கர் கிழிக்காத புது செருப்பு! - ஆதாரங்கள் ஜோடிக்கப்படுகிறதா?

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 3 தமிழர்களுக்கு எதிராக கர்நாடக வனத்துறையினர் ஆதாரங்களை ஜோடிப்பதாக எழுந்துள்ள விமர்சனம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மூன்று தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடுகடந்த 15-ஆம் த... மேலும் பார்க்க

தஞ்சை: குட்கா கடத்தியவர்களை தப்பிக்க வைத்த போலீஸ் - இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்!

தஞ்சாவூரில், கடந்த 10-ம் தேதி, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம்(45) தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அம்மாபேட்டையைச் சேர்ந்த ஆறுமுகம்(45), முருகன்(48) ஆகிய இருவரும் தடைசெ... மேலும் பார்க்க

சென்னை: பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் தூய்மைப் பணியாளர் சடலம்; பரிசோதனையில் அம்பலமான கொலை!

சென்னை திருவேற்காடு அன்னலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஹோமாவதி (55). இவர், வளசரவாக்கம் மண்டலத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தார். இவரின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனால் ஹோமாவத... மேலும் பார்க்க