செய்திகள் :

TN Assembly: பெண்களை தவறாக பேசியதால்தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்; மிசாவில் இல்லை!- அமைச்சர் சி.டி.ஆர் ஆவேசம்| LIVE

post image

'கோவி.செழியன் கேள்வி!'

அமலாக்கத்துறை சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அதை முதல்வர் எப்படி பேசலாம்?

சர்க்காரியா கமிஷனில் யாரும் குற்றவாளி என தீர்ப்பு கொடுக்கப்படவில்லை . அதை வைத்தே திமுகவை விமர்சிக்க காரணம் என்ன?

இறந்து போன முரசொலி மாறனை பற்றி முதல்வர் ஏன் பேச வேண்டும்?

- கோவி.செழியன்

'மிசா கைது விவாதம்!'

சர்க்காரியா கமிஷனை பற்றி இந்த அவையில் எவ்வளவோ பேசப்பட்டிருக்கிறது. கலைஞர் எங்கெல்லாம் அமௌண்ட் வாங்கினார் என அந்த அறிக்கையில் இருக்கிறது. அதன் அடிப்படையில்தான் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது.

மிசா காலத்தில் திருட்டு, கொள்ளை, பெண்களை தவறாக பேசியவர்களையெல்லாம் கைது செய்தார்கள். அதையெல்லாம் மிசா கைது என எடுக்க முடியாது. இந்திரா காந்தியைப் பற்றி ஸ்டாலின் அவதூறாக பேசியிருந்தார். பெண்களை தவறாக பேசியதால்தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்கிற குறிப்புகள் இருக்கிறது.

- சி.டி.ஆர்

'அமைச்சர் ஆதவ் கொண்டு வந்த உரிமை மீறல் புகார்!'

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதிகள் விதி எண்.219-ன் கீழான உரிமை மீறல் எழுப்புவது - தொடர்பாக.

---

வணக்கம், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதிகள் விதி எண்.219-ன் கீழ் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு.எ.வ.வேலு அவர்கள், 2021-2026-ஆம் காலகட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த போது, 14.01.2026 நாளிட்ட G.O.(Ms) No.06 மூலம், 2026-27 ஆம் ஆண்டிற்கான CRIDP திட்டத்தின் கீழ் 80 பணிகளுக்கு ரூ.2,000 கோடி முன்னூட்டிய நிதியாக அனுமதி வழங்கப்பட்டு, அதற்காக 2026-27 மொத்தத் திட்ட அனுமதிக்குள் பின்னர் சரிசெய்யப்படும் என உறுதரவிடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் 2026-27 மாணியக் கோரிக்கைகள் பேரவையால் வாக்களிக்கப்பட்டவோ, Appropriation Act நிறைவேற்றப்பட்டவோ இல்லை.

இருப்பினும், இப்பணிகளுக்கு ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, 2025-26 நிதியாண்டிலேயே 80 பணி ஆணைகளும் வழங்கப்பட்டு, எதிர்கால Budget provision மீது ரூ.2,000 கோடி committed liability உருவாக்கப்பட்டுள்ளது. இது பேரவையின் முன்னனுமதியின்றி Budget-ஐ எதிர்பார்த்து பொறுப்பு ஏற்படுத்திய "Anticipation of Budget" ஆகும்.

அரசியலமைப்புச் சட்ட உறுப்புகள் 202 முதல் 206 வரை, மாநிலத்தின் செலவினங்களைப் பரிசீலித்து மானியம் வழங்கும் அதிகாரத்தை பேரவைக்கே அளிக்கின்றன. குறிப்பாக உறுப்பு 203-ன் கீழ் மானியத்தை ஏற்க, மறுக்க அல்லது குறைக்க பேரவைக்கு உள்ள அதிகாரம், ஒப்பந்தப் பொறுப்பை முன்னிட்டியே உருவாக்கியதால் செயல்முறையில் பறிக்கப்பட்டுள்ளது. பின்னர் நிதி ஒதுக்கீடு பெறுவது, முன்னமே உருவாக்கப்பட்ட அங்கீகாரமற்ற பொறுப்பைச் சட்டபூர்வமாக்காது.

எனவே, பேரவையின் நிதி மேலாண்மைத்தையும் கண்காணித்தையும் பாதித்த இவ்விவகாரத்தை, பேரவை விதி 225-ன் கீழ் அவை உரிமைக் குழுவிற்கு examination, investigation and report-க்காக அனுப்புமாறு பணிவுடன் கோருகிறேன். இப்பொருண்மை தொடர்பான சிறுகுறிப்பினையும், தேவையான ஆவணங்களையும் இதுடன் இணைத்துள்ளேன்.

அமளியில் ஈடுபட்ட திமுகவினர்; அவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர்

தமிழக சட்டமன்றத்தின் கடைசி நாள் இன்று... நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் விஜய், திமுகவை விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில் முதல்வரின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் திமுகவினர் அமளியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

TN Assembly
TN Assembly

திமுகவினரின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர், "இது பொதுக்கூட்ட மேடை அல்ல, கட்சி கூட்ட மேடை அல்ல. திமுகவினர் அமைதியாக இருந்தால் பேச அனுமதிப்பேன்" என்று கூறினார்.

இருப்பினும் தொடர்ந்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் திமுகவினரை அவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டிருக்கிறார்.

இதனால் அவைக்காவலர்கள் சபைக்குள் வரவழைக்கப்பட்டு, அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள், குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.

'குற்றம்சாட்டப்பட்ட என்னுடைய மருமகள், JCD பிரபாகர், லீமா ரோஸின்..!'- விஜய் உரைக்கு இ.கருணாநிதி பதில்

நேற்று சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உரையாற்றியிருந்தார். அதில் சர்க்காரியா கமிஷன் முதல் மிசா வரை பலவற்றைக் குறிப்பிட்டுத் திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். அதில் தி... மேலும் பார்க்க

"மூன்று கோப்புகள் இருப்பதாக முதல்வர் சொன்னார், ஏன் அதைப் பற்றி பேசவில்லை? சம்மந்தமே.!" - பெ.சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். "சட்டமன்றம் சண்டைமன்றமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி... மேலும் பார்க்க

"தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎம் பங்கேற்காது"- பெ.சண்முகம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாளை (செப்.9) கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் மாநில செயலாளர் சி.பி சண்ம... மேலும் பார்க்க

'சாப்பாட்டுல உப்பை குறைங்க!' - சட்டமன்றத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் அருண்ராஜ்

சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் கூட்டம் நடந்து வருகிறது. இதில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் 'உப்புக் குறைப்பு' என ஒரு முக்கியமான திட்டத்தை அறிவித்திருந்தார்.அமைச்சர் அருண்... மேலும் பார்க்க

``தவெக கூட்டணிக் கட்சி கூட்டத்துக்கு போகமாட்டோம்; எந்தக் கூட்டணியிலும் இல்லை" - CPIM கே.பாலகிருஷ்ணன்

சிபிஐஎம் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``நாங்கள் அமைச்சரவையில் சேரவில்லை. எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் மிகத் தெ... மேலும் பார்க்க

'வெள்ளை சீருடை போலீஸ்; ஒரு நாளுக்கு 100 ரூபாய் படி.!' - யார் இந்த அவைக்காவலர்கள்?

திமுக உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையை சூழ்ந்து கோஷம் போட்டதால் அவைக்காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இந்த அவைக்காவலர்கள் என்பவர்கள் யார்?அவைக் காவலர்கள்அவை எப்போதுமே சுமூகம... மேலும் பார்க்க