செய்திகள் :

'வெள்ளை சீருடை போலீஸ்; ஒரு நாளுக்கு 100 ரூபாய் படி.!' - யார் இந்த அவைக்காவலர்கள்?

post image

திமுக உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையை சூழ்ந்து கோஷம் போட்டதால் அவைக்காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.

இந்த அவைக்காவலர்கள் என்பவர்கள் யார்?

அவைக் காவலர்கள்
அவைக் காவலர்கள்

அவை எப்போதுமே சுமூகமாக நடக்காது. அவைக்குள் கடும் அமளி நடக்கும் சூழலில் அதை கட்டுப்படுத்த அவைக்குள் நுழையும் காவலர்கள்தான் அவைக் காவலர்கள். சபாநாயகர் அவைக்காவலர்களை அழைத்தால் மட்டுமே அவர்கள் அவைக்குள் நுழைய முடியும்.

சபாநாயகர் யாரை எந்தக் கட்சியினரை குறிப்பிடுகிறாரோ அந்தக் கட்சியினரை அவர்களை இந்த அவைக் காவலர்கள் குண்டுக்கட்டாகக் கூட வெளியேற்றி, அவை தொடர்ந்து சுமூகமாக நடப்பதை உறுதி செய்வர்.

தலைமைச் செயலகத்தின் மற்ற ஊழியர்களைப் போல இவர்கள் தலைமைச் செயலகத்தில் பணியாற்றக் கூடியவர்கள் அல்ல. இவர்களும் காவல்துறையை சேர்ந்தவர்களே. சட்டமன்றம் நடைபெறாத காலக்கட்டங்களில் காக்கி உடையில் வழக்கமான காவல் பணியில் இருப்பார்கள்.

அவைக் காவலர்கள்
அவைக் காவலர்கள்

அவை கூடும்போது சிறப்புப் பணியாக வெள்ளை உடையோடு அவைக் காவலர்களாக வருவார்கள். தமிழக சட்டமன்றத்தில் இப்போது 150 அவைக் காவலர்கள் பணியில் இருக்கின்றனர். இவர்கள் எல்லாருமே சென்னையின் வெவ்வேறு காவல்நிலையங்களில் பணியாற்றக் கூடியவர்கள். அவை நடக்கும் போது ஒவ்வொரு லிமிட்டில் இருந்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான காவலர்கள் அவைக்காவலர்களாக சிறப்புப் பணிக்கு வருவார்கள். இந்த அவைக்காவலர் பணியை செய்வதற்காக இவர்களுக்கு ஒரு நாளைக்கு 100 ரூபாய் படியாக வழங்கப்படும். இன்றோடு இந்தக் கூட்டத்தொடர் முடிகிறது. அதனால் நாளை முதல் இவர்கள் வெள்ளை உடையை விட்டு வழக்கமான காக்கி உடையில் பணிக்கு சென்றுவிடுவார்கள்.!

"தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎம் பங்கேற்காது"- பெ.சண்முகம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாளை (செப்.9) கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் மாநில செயலாளர் சி.பி சண்ம... மேலும் பார்க்க

'சாப்பாட்டுல உப்பை குறைங்க!' - சட்டமன்றத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் அருண்ராஜ்

சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் கூட்டம் நடந்து வருகிறது. இதில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் 'உப்புக் குறைப்பு' என ஒரு முக்கியமான திட்டத்தை அறிவித்திருந்தார்.அமைச்சர் அருண்... மேலும் பார்க்க

``தவெக கூட்டணிக் கட்சி கூட்டத்துக்கு போகமாட்டோம்; எந்தக் கூட்டணியிலும் இல்லை" - CPIM கே.பாலகிருஷ்ணன்

சிபிஐஎம் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``நாங்கள் அமைச்சரவையில் சேரவில்லை. எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் மிகத் தெ... மேலும் பார்க்க

"ஸ்டாலினை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்வர் பாடி லாங்வேஜ்; அதனால்.!" - எ.வ வேலு

நேற்று (செப்.7) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் விஜய், திமுகவை விமர்சித்து பேசியிருந்தார். குறிப்பாக சர்க்காரியா கமிஷன்,... மேலும் பார்க்க

ஒன்றரை மணி கெடு; குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட திமுக MLAக்கள்!-சபாநாயகரின் கோபத்துக்கு காரணம் என்ன?

சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நடந்து வருகிறது. இந்நிலையில் அவை தொடங்கிய 45 நிமிடத்தில் அமளியில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏக்களை அவைக்காவலர்களை அழைத்து குண்டுக்கட்டாக வெள... மேலும் பார்க்க

'ஸ்டாலின் மிசாவில் சிறைக்கு செல்லவில்லை; பெண்களை தவறாக பேசியதால்தான்..' - அமைச்சர் சி.டி.ஆர் ஆவேசம்!

காவல்துறை மானியக்கோரிக்கையின் மீது முதல்வர் விஜய் நேற்று பதிலளித்து பேசியிருந்தார். அதில் சர்க்காரியா கமிஷன் பற்றியும் மிசா பற்றியும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அவற்றை அவைக்குறிப்பிலிருந்து நீக... மேலும் பார்க்க