செய்திகள் :

Vijay: "படங்களில் மீனவர்களைக் காப்பது போல் நடித்துவிட்டு, நிஜத்தில்..."- நயினார் நாகேந்திரன் காட்டம்

post image

பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் புதிய தலைமைச் செயலகம் மற்றும் முதலமைச்சரின் லண்டன் பயணம் குறித்து காட்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``நடைபெறவுள்ள இரண்டு தொகுதி இடைத்தேர்தல்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயமாக வெற்றிபெறும். இதற்காக நாங்கள் முழு முயற்சியுடன் பாடுபடுவோம்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வார். புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் எதுவுமே இல்லை.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

மீனவர்கள் அதிகம் வாழும் பகுதி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் நடமாடும் இடம் என்பதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மேலும், வரைபடம் (Plan), கட்டிடக் கலைஞர் (Architect) விவரங்கள் மற்றும் டெண்டர் எதுவும் அறிவிக்கப்படாமல், வெறும் ரூ1,200 கோடி ரூபாய் தொகையை மட்டும் அரசு அறிவித்துள்ளது. டெண்டர் கோராமலேயே நிதியை ஒதுக்குவது ஊழலின் தொடக்கமாகும்.

ஊழலற்ற ஆட்சி என்று கூறிக்கொண்டு, தற்போதைய அரசு முதலமைச்சரின் அறையிலிருந்தே ஊழலைத் தொடங்கியுள்ளது. முதலமைச்சரின் அறையைப் புதுப்பிக்க டெண்டர் விடாமல் 5 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. புதிய தலைமைச் செயலகம் கட்டப்போகும் நிலையில், இந்தச் செலவு தேவையா என்ற கேள்வி எழுகிறது.

அதேபோல், மேட்டூர் அணையைத் திறந்து வைப்பதற்கென 5 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது. சென்னையிலிருந்தே பொத்தானை அழுத்தி அணையைத் திறக்க முடியும் எனும் சூழலில், இத்தனை கோடி ரூபாயை விரயம் செய்வது ஏன்?

நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பு
நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பு

திரைப்படங்களில் மீனவர்களைக் காப்பாற்றுவது போல் நடித்துவிட்டு, நிஜத்தில் அவர்களின் வாழ்வாதாரத்தைக் காலி செய்ய அரசு முயல்வது நியாயமற்றது. முதலமைச்சரின் லண்டன் பயணம் எதற்காக என்பதில் எந்தத் தெளிவும் இல்லை. சென்னையிலிருந்து வெறும் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நந்தனம் கிண்டியிலேயே அசோக் லேலண்ட் நிறுவனம் இருக்கும்போது, லண்டனுக்குச் சென்று அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வதாகக் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

தொழில்துறை அமைச்சரோ அல்லது செயலாளர்களோ உடன் செல்லாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த லண்டன் பயணத்தின் மூலம் என்ன முதலீடுகள் ஈர்க்கப்பட்டன என்பதை ஊடகங்கள்தான், மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்." என்றார்.

'பாஜகவும் தேர்தல் ஆணையமும் கைகோத்து ஒரு கட்சியைப் பிளவுபடுத்துகின்றன'- மம்தாவுக்கு ராகுல் ஆதரவு

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திரிணமுல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்த நிலையில் மம்தா பானர்ஜி தலைமையில் ஒரு பிரிவினரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரிதப்ரத பானர்ஜி தலைமையில் மற்... மேலும் பார்க்க

"காங்கிரஸுக்காக மிகப்பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறது த.வெ.க!" - சொல்கிறார் ரவிக்குமார் எம்.பி

"த.வெ.க தலைவர் விஜய், கரூர் கூட்டத்துக்கு வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வந்ததால்தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அத்தனை உயர் பலிகளும் நடந்தன. எனவே, விஜய் மீது வழக்குப் பதிந்து அவரது அரசியலை அம்பலப்படுத்த வேண... மேலும் பார்க்க

"சௌமியாவுக்கு Fans Club தொடங்க இருக்கோம்னு சொன்னாங்க..!"- பாமக தலைவர் அன்புமணி சொன்ன தகவல்!

பாமக பொதுக்குழு கூட்டம் நேற்று விக்ரவாண்டியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "இப்போது தான் நம்மைப் பற்றி எல்லோரும் கொஞ்சம் நன்றாக பேசுகிறார்கள். இல்லையென்றால் அய்ய... மேலும் பார்க்க

அயலக மாணவர் விவகாரம்: ``இதோ ஆதாரம்; உங்க IT Wing மூலம் தவறான தகவல பரப்புறீங்க" - மாணவர் பாரதிதாசன்

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்ற பாரதிதாசன் என்ற மாணவர், கல்வி உதவித்தொகை கிடைக்காமல் தாம் மிகவும் சிரமப்படுவதாக ஏப்ரல் மாதம் முதல் தொடர... மேலும் பார்க்க

அயலக மாணவரின் குற்றச்சாட்டு: ``அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன்"- சமூக நீதித்துறை அமைச்சகம் பதில்

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்ற பாரதிதாசன் என்ற மாணவர், கல்வி உதவித்தொகை கிடைக்காமல் தாம் மிகவும் சிரமப்படுவதாக ஏப்ரல் மாதம் முதல் தொடர... மேலும் பார்க்க

"அந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது..!"- அயலக மாணவர் விவகாரத்தில் ஸ்டாலின் கண்டனம்

அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் உதவித்தொகை கிடைக்கவில்லை என மாணவர் பாரதிதாசன் மீண்டும் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டிருந்தார். இதற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போத... மேலும் பார்க்க