செய்திகள் :

கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய முதல்வர்... விவசாயிகளுக்கு நிம்மதி தந்த இரட்டை அறிவிப்புகள்!

post image

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

“தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் நெல் கொள்முதலில் நடைபெறும் ஊழல் ஒழிக்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் குறு, சிறு விவசாயிகள் வாங்கிய கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு 3,500 ரூபாயும், கரும்பு ஒரு டன்னுக்கு 4,500 ரூபாயும் வழங்கப்படும்” எனத் தேர்தல் வாக்குறுதிகள் அளித்து விவசாயிகளின் இதயத்தில் இடம்பிடித்தார் விஜய்.

நெகிழ்ந்து போன விவசாயிகள், த.வெ.க-வுக்கு ஏகோபித்த வாக்குகள் அளித்து, அவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி அழகு பார்த்தார்கள். ஆனால், மிகுந்த ஏமாற்றத்துக்கும் ஆற்றாமைக்கும் ஆளாக நேரிட்டது. நெல் கொள்முதலில் நடைபெறும் லஞ்ச லாவண்யம், விவசாயக் கடன் தள்ளுபடி, நெல் மற்றும் கரும்பு விலை உயர்வு ஆகியவற்றில் கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் விஜய் நிறைவேற்றாததால் விவசாயிகள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

இந்த நிலையில்தான் கொஞ்சமும் எதிர்பாராதவிதமாக விவசாயிகளுக்கு நிம்மதியும் ஆறுதலும் அளிக்கும் விதமாக இரு அறிவிப்புகளை வெளியிட்டு... அவர்களின் கோபத்தைச் சற்று தணித்துள்ளார், முதல்வர் விஜய். ஒன்று, பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் ரத்து. மற்றோர் அறிவிப்பு, விவசாயிகள்மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் ரத்து. இந்த இரண்டு அறிவிப்புக்காகவும் முதலமைச்சர் விஜய்யை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

அரசியல் கட்சிகள் ஆட்சியில் அமரும் வரை விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசுவதும், ஆட்சியில் அமர்ந்துவிட்டால், `நாட்டின் தொழில் வளர்ச்சிதான் முக்கியம்’ என விவசாயிகளின் வாழ்வாதாரங்களைச் சூறையாடுவதும் வழக்கமான ஒன்று. தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட அரசியல் கட்சிகள், அத்தகைய படுபாதகச் செயலைப் பலமுறை அரங்கேற்றியுள்ளன. இந்த நிலையில், முதலமைச்சர் விஜய், பரந்தூர் விமான நிலைய விஷயத்தில் விவசாயிகளுக்கு ஆதர வாக அதிரடி முடிவெடுத்து விதிவிலக்காகவும் முன்மாதிரியாகவும் நடந்துகொண்டுள்ளார்.

மக்கள் அனைவரும் விமானத்தில் பயணிப்பதில்லை. ஆனால், உணவு அனைவருக்கும் அவசியமானது. விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதென்பது உயிர் மூச்சு போன்றது. பரந்தூர் விமான நிலைய விஷயத்தில் கடந்தகால தி.மு.க ஆட்சியின் அணுகுமுறை மிகவும் தவறானது. தற்போது எதிர்க்கட்சியாகவும், அவர்கள் விவசாயிகளுக்காக நிற்கவில்லை.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 70 சதவிகிதம் பேர் விவசாயிகள். விவசாயிகள் நலன் கருதி செயல்படாவிட்டாலும், தி.மு.க-வின் எதிர்காலம் கருதியாவது, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், இந்த விஷயத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்துகொள்ள வேண்டும்.

தற்போது பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்தும், விவசாயிகளின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்து அறிவித்துள்ள த.வெ.க அரசுக்குப் பாராட்டுகள்.

- ஆசிரியர்

அமெரிக்க கம்பெனி வேலையை உதறிவிட்டு முருங்கை விவசாயம் - ரூ.30 லட்சம் சம்பாதிக்கும் எஞ்சினியர்!

மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயிகள் பலர் விவசாயத்தை நவீன முறையில் பெரிய அளவில் செய்வது வழக்கம். மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள குருத்வாடி என்ற இடத்தை சேர்ந்த சாகர் காரே என்ற மெக்கானிக்க... மேலும் பார்க்க

Mettur: வினாடிக்கு 7,000 கன அடி; 8 கண் மதகுகள் வழியாக சீறிப்பாயும் நீர் - கழுகு பார்வைக் காட்சிகள்!

மேட்டூர் அணை கழுகு பார்வைமேட்டூர் அணை கழுகு பார்வைமேட்டூர் அணை கழுகு பார்வைமேட்டூர் அணை கழுகு பார்வைமேட்டூர் அணை கழுகு பார்வைமேட்டூர் அணை கழுகு பார்வைமேட்டூர் அணை கழுகு பார்வைமேட்டூர் அணை கழுகு பார்வை... மேலும் பார்க்க

வயலில் அழுகும் தக்காளி; உண்மையில் குப்பையா? உள்ளே இருக்கும் பெரிய பிசினஸ் - விவசாயிகளுக்கு டிப்ஸ்!

தக்காளி விலை குறையும் நேரங்களில், அறுவடை செய்தாலும் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கிறார்கள். குறிப்பாக அறுவடைக் கூலி, போக்குவரத்துச் செலவு உள்ளிட்டவை அதிகமாகும்போது, த... மேலும் பார்க்க

வேலூர்: மோர்தானா அணையில் 9 நாள்களுக்கு நீர்த் திறப்பு; 2,510 ஏக்கர் நிலம் பாசனம் பெற வாய்ப்பு!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள மோர்தானா கிராமத்தில் கௌண்டன்யா ஆற்றின் குறுக்கே `மோர்தானா அணை’ அமைந்திருக்கிறது. இந்த அணை 261.36 மில்லியன் கனஅடி கொண்டது. இதில் நேற்றைய நிலவரப்படி, பயன்படுத்தக்... மேலும் பார்க்க

பசுமை சந்தை!

விவசாய விளைபொருள்கள், கால்நடைகள், மீன்கள், பண்ணை உபகரணங்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் சந்தைப்படுத்தலாம். இயற்கை இடுபொருள்களான உரம், பூச்சிவிரட்டி தொடர்பான தகவல்கள் மற்றும் நிலம் விற்பது, வாங்குவது தொடர... மேலும் பார்க்க